Friday 30 November 2018

தேசிய வாசிப்பு.



Nov.30.2018
ஊர்காவற்றுறை பிரதேச சபை அனலைதீவு பொது நூலகம் 2018ம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாதத்திற்கான பரிசளிப்பு விழாவும் எழுத்தாளர் கௌரவிப்பு நிகழ்வும் ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாாளர் திரு. ஜெயக்காந்தன் தலைமையில் பி.. 02.00 மணியளவில் அனலைதீவு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அனலைதீவு பொது நூலகத்தின் முன்னைநாள் நூலகர் மற்றும் எழுத்தாளர் திரு. . சௌந்தரராஜ சர்மா அவர்களும் சிறப்பு விருந்தினராக முன்னாள் அதிபர் திரு.சி.காராளம்பிள்ளை, அனலைதீவு மற்றும் சிறப்பு விருந்தினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அனலைதீவு பொது நூலகத்தின் முன்னைநாள் நூலகர் மற்றும் எழுத்தாளர்
திரு. . சௌந்தரராஜ சர்மா அவர்களுக்கு  தமது சேவை காலத்தில் நூலகத்தின் வளர்ச்சிக்கும் எமது மண்ணின் கல்வி, கலாச்சார மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் சிறந்த சேவையினை ஆற்றியமைக்காக ஊர்காவற்றுறை பிரதேச சபையினால் "அனலை அறிவொளி" என்னும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 தகவலுடன் படங்கள்:திரு.த.கோகுலராஜ்.