Wednesday 17 March 2021

நினைவேந்தல்.

யாழ் அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலய முன்னாள் அதிபர் அமரர் சிவப்பிரகாசம் காராளபிள்ளை அவர்கள் நினைவாக பெண் தலைமைதத்துவ குடும்பங்களை சேர்ந்த 5 மாணவர்களிற்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்வு.

இரண்டு மிதிவண்டிகள் மு/பாரதி மகா வித்தியாலய மாணவர்களிற்கும்.

இரண்டு மிதி வண்டிகள் மு/வள்ளிபுனம் மகா வித்தியாலய மாணவர்களிற்கும்

ஒரு மிதிவண்டி மு/சிறிசுப்பிரமணிய வித்தியாசாலை மாணவர்களிற்கும் வழங்கப்பட்டது.

இவ் நலத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய முகம் தெரியா பின்வரும் நண்பர்களுக்கு நன்றி.

செல்லையா இரவீந்திரா - லண்டன்

மலர்விழி செல்லத்துரை,

கந்தன் மகாலிங்கம்,

தம்பு திருச்செல்வம்,

மார்க்கண்டு பாஸ்கரன்,

கார்த்திகேசு இரத்தினசிங்கம் - ஜேர்மனி

நடராசா பாலகிருஸ்ணன்,

செல்வா வீரா நினைவுக்குழு, கல்யாணி சிவம்- கனடா

 

நன்றி:FB Nallaiah Amirthanathan




மேடைப்பேச்சின் ஆளுமையாய், நடமாடிய நூலகமாய், காணும்பொழுதெல்லாம் கற்றுக்கொடுக்கும் பாடசாலையாய்,
கம்பீரத்தின் மறு உருவாய், அறிவுரையின் திருவுருவாய், தள்ளாத வயதிலும் தான் பிறந்த மண்ணில் தவழ்ந்து மகிழ்ந்த ஊரவராய், நிகழ்வுகளின் நாயகனாய் வாழ்வாங்கு வாழ்ந்து இறைபதம் அடைந்த அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய முன்னாள் அதிபர் பெருமதிப்பிற்குரிய
திரு.சிவப்பிரகாசம் காராளபிள்ளை அவர்களின் வாழ்வையும், நினைவையும் யுத்தம் தின்று துப்பிய பெண் தலைமைத்துவ குடும்பங்களில் கல்விக்காக ஏங்கும் மாணவர்களுக்கான கல்விசார் உதவியினூடாக மனமேந்தி அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக அன்னாரின் ஆத்மசாந்திக்காக எல்லாம் வல்ல இயற்கையையும் இறையருளையும் வேண்டுகிறோம்.
கல்விசார் உதவியூடான நினைவேந்தலை நிறைவுசெய்ய பேருதவிசெய்த மு.புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலை அதிபர் மதிப்பிற்குரிய திரு நல்லையா அமிர்தநாதன் அவர்களுக்கு ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக உளமார்ந்த நன்றி.
குறுகிய கால ஏற்பாட்டில் தமது பங்களிப்பை மனமுவந்து வழங்கிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றி.



 

Thursday 4 March 2021

ஆளுமை.


மேடைப்பேச்சின் ஆளுமையாய், நடமாடிய நூலகமாய், காணும்பொழுதெல்லாம் கற்றுக்கொடுக்கும் பாடசாலையாய்,

கம்பீரத்தின் மறு உருவாய், அறிவுரையின் திருவுருவாய், தள்ளாத வயதிலும் தான் பிறந்த மண்ணில் தவழ்ந்து மகிழ்ந்த

ஊரவராய், நிகழ்வுகளின் நாயகனாய் வாழ்வாங்கு வாழ்ந்து இறைபதம் அடைந்த அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய முன்னாள் அதிபர் பெருமதிப்பிற்குரிய திரு.சிவப்பிரகாசம் காராளபிள்ளை அவர்களின் பேரிழப்பால் துயருறும் அன்னாரின் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரினதும் துயர்தோய்வில் உலகெங்கும் வாழும் அனலைதீவு மக்கள் அனைவரும் பங்குகொண்டு அவரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இயற்கையையும் இறையருளையும் வேண்டுகிறோம்.