Saturday 29 September 2018

பாராட்டு.




2013ம் ஆண்டு அனலைதீவு மனோன்மணி அம்பாள் அறநெறிப் பாடசாலை நிர்வாகத்தினரால் மனோன்மணி அம்பாள் ஆலய முன்றலில் 1990 ஆண்டு கடல்கொண்ட உயிர்களின் நினைவாக வழங்கப்பட்ட மரங்களில் ஒன்றான அந்த மாமரம்
செல்வன்.ரவீந்திரன் நிதர்சன் அவர்களின் அக்கறையுடன்கூடிய சிறப்பான பராமரிப்பினால் இன்று இனிப்பான கனிதரும் மரமாக வளர்ந்துள்ளது.
காலத்தையும் நமது கடமையையும் உணர்ந்து செய்யும் சின்னச்சின்ன தூரப்பார்வை கொண்ட செயல்கள் அதற்கான வெகுமதியை அடுத்த சந்ததிக்கு கொடுத்தே தீரும்.
அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தில் 8A.C சித்திபெற்று  கல்வியைத் தொடரும்  செல்வன்.ரவீந்திரன் நிதர்சன்
அவர்களின் இயற்கைமீதான அக்கறையையும் கனிதரும் மரம் வளர்த்த பண்பையும் பாராட்டுவோம்.
- அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.














Monday 24 September 2018


Sunday 23 September 2018

பாராட்டு.


அனலைதீவு வைத்தியசாலையில் கடந்த ஒன்றரை வருடமாக பல்வேறு வகையான சிரமங்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் சிறந்த முறையில் சேவை செய்ய எமது வைத்தியசாலை அதிகாரி இடமாற்றம் பெற்று செல்கின்றார். எனவே அவர் ஆற்றிய மகத்தான சேவைக்காக எமது சனசமூ௧ நிலையத்தின் சார்பிலும் ஊர் மக்களின் சார்பிலும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தபோது.
-
அருணோதயா சனசமூக நிலையம்