Saturday 30 January 2021

நன்றி.


அனலைதீவு அன்னைவேளாங்கண்ணி ஆலயம், அனலைதீவு ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயம், அனலைதீவு அருணோதயா விளையாட்டுக் கழகம் ஆகியோரின் பணிவான வேண்டுயோளுக்கிணங்க "பசுமை அனலை அமையம்" தனது மரங்கள் பராமரிப்பு பணிகளுக்குள் அனலைதீவு வடக்கு, மேற்கு, அன்னைவேளாங்கண்ணி ஆலய அருகாமை, மற்றும்  மகாவிஷ்ணு ஆலய அருகாமை ஆகிய பொது இடங்களில் நடப்பட்டிருந்த  மரங்களை நீர்ஊற்றி வளர்ப்பதற்கான நற்செயலை உள்வாங்கிகொண்டு மரங்களுக்கு நீர் ஊற்றி வளர்க்க முன்வந்துள்ளமைக்காக ஊர்மக்களனைவரினதும் சார்பாக உளமார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.

"பசுமை அனலை அமையம்"  அனலைதீவில் மேற்கொள்ளும் இயற்கைசார்ந்த நற்பணிகள் தொடர வாழ்த்துக்கள்.



































 

Tuesday 26 January 2021

நன்றி.


நீண்டகாலமாக ஏங்கித்தவித்த அனலைதீவு பாடசாலைகளுக்கான புதிய ஆசிரிய நியமனங்களினூடாக அனலைதீவு பாடசாலைகளுக்கு புதிய நியமனம் பெற்று கடமையேற்றிருக்கும் ஆசிரியப்பெருந்தகைகள் அனைவரையும் அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக வாழ்த்தி வரவேற்கும் நாம் அதற்காக அரும்பாடுபட்ட அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய அதிபர் மதிப்பிற்குரிய திரு.நா.இராதாகிருஸ்ணன் அவர்களுக்கும். அனலைதீவு வடக்கு அ.த.க.பாடசாலை அதிபர் மதிப்பிற்குரிய விக்னேஸ்வரி அவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அனலைதீவுக்கான இந்த புதிய ஆசிரியர் நியமனங்களை தேவையறிந்து உறுதிசெய்துதவிய வலயக்கல்விப்பொறுப்பாளர் மதிப்பிற்குரிய
திரு. பொ.இரவிச்சந்திரன் அவர்கள், கோட்டக்கல்விப்பொறுப்பாளர் மதிப்பிற்குரிய திரு.மு.சத்தியசீலன் அவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கும், இந்த மாற்றத்திற்காக உழைத்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும். அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.




 

Saturday 23 January 2021




 

Friday 22 January 2021

Analaitivu - எங்கள் கிராமம் எழிலோடு தெரிகிறது!!...



.


யாழ் அனலைதீவு அமரர் செல்வா வீரகத்தி நினைவாக இன்று
மு/வேணாவில் சிறி முருகாணந்த வித்தியாலய மாணவர்கள் மூவருக்கும்
மு/சிறி சுப்பிரமணிய வித்தியாசாலை மாணவர் ஒருவருக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
நன்றி _ செல்வா வீரகத்தி அவர்களின் நண்பர்கள்


நன்றி:
FB:Nallaiah Amirthanathan


 

Saturday 16 January 2021

ஒரு காலத்தில் ஊரின்  "பசி" கடைசி லோஞ்சிவரை காத்துக்கிடந்த வரலாற்றுத்தடம்.