Tuesday 28 March 2017

வெற்றிப் பாதை.





யாழ் அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தில் 2016 ஆம் ஆண்டு க.பொ.த.சாதரணப் பரீட்சையில் 23 மாணவர்கள் தோற்றி 19 பேர் க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு தகுதி பெற்றுள்ளனர்.இப்பெருமிதமான மகிழ்வான முன்னேற்றத்திற்கு உறுதுணையாக உழைத்த வித்தியாலய அதிபர் பெருமதிப்பிற்குரிய திரு.ராதாகிருஸ்ணன் அவர்களுக்கும் மற்றும் பெருமதிப்பிற்குரிய அனைத்து ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம். மதிப்புமிக்க மாணவச் செல்வங்களனைவருக்கும் நமது மனதார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.
தொடரட்டும் முன்னேற்றமான வெற்றிப் பாதை.

Friday 17 March 2017

சமூக வலுவூட்டல்.

 சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நலன் நோன்புகை அமைச்சினால் அனலைதீவு தெற்கு J/38 கிராம அலுவலர் பிரிவு மாதிரி கிராமமாக முன்மொழியப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பனம் பொருட்கள் உற்பத்திகளை மேம்படுத்தும் பொருட்டு ஏழு மில்லியன் (7 million)  ரூபாய்கள் வாழ்வாதார மற்றும் அபிவிருத்தி நோக்கங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கிராம மக்களுடனான கலந்துரையாடல் கடந்த 15ம் திகதி ஐயனார் ஆலய அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சின் பிரதிநிதிகள், சமுர்த்தி பணிப்பாளர்கள், யாழ் மாவட்ட செயலக உயரதிகாரிகள், ஊர்காவற்றுறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அனலைதீவு தெற்கு கிராம மக்கள் என்போர் கலந்து கொண்டனர்.

யாழ் மாவட்டத்தில் இருந்து மூன்று பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று கிராமங்களில் அனலைதீவு தெற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.




 தகவல் மற்றும் படங்கள்: திரு.த.கோகுலராஜ்

Wednesday 8 March 2017

முன்பள்ளி.

   அனலைதீவு தெற்கு பாலமுருகன் முன்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின்போதான படங்கள்.
படங்கள்: திரு.த.கோகுலராஜ்.