Sunday 25 April 2021

கோசாலை.



நவம்பர் .16.2020ம் திகதி புளியந்தீவில்  அனலைதீவு இந்து சமய கலாசார பேரவை அமைப்பினரின் நல்முயற்சியால் கோசாலை ஒன்று அமைக்க ஊர்காவற்துறை பிரதேச செயலர் மதிப்பிற்குரிய திருமதி மஞ்சுளாதேவி சதீசன் அவர்களினால் அத்திவாரமிடப்பட்ட செயற்திட்டம் லண்டன் வாழ் அனலை மக்களின் பொது ஒத்துழைப்போடும்  அனலைதீவு இந்து சமய கலாசார பேரவை அமைப்பினரின் தொடர்ச்சியான நல்முயற்சியாலும் உயர்ந்து
நிறைவை  நோக்கி வளர்கிறது. எதிர்கால பசு வளத்தை பாதுகாக்கும் நற்பணிக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
25.04.2021





 

கோசாலை.


Nov.16.2020ம் திகதிபுளியந்தீவில் அனலைதீவு இந்து சமய கலாசார பேரவை அமைப்பினரின் நன்முயற்சியால் கோசாலை ஒன்று அமைக்க ஊர்காவற்துறை பிரதேச செயலர் மதிப்பிற்குரிய திருமதி மஞ்சுளாதேவி சதீசன் அவர்களினால் அத்திவாரமிடப்பட்டுள்ளது. இந்த முயற்சி மாடுகளையும் குறிப்பாக மண்ணின் வளத்தையும் பாதுகாக்க பெரிதும் உதவியாக இருக்கமென்பதோடு பாதுகாப்பான பயிற்செய்கையையும் இனிவருங்காலம் உறுதிப்படுத்தும். மாடுகள் இல்லாத பூமி உயிர்ப்பிழந்துபோகும். காலமறிந்து செய்யும் இந்த நல்ல முயற்சியை முன்னெடுத்தவர்கள் அதற்கான உதவியை வழங்குபவர்கள் அனைவருக்கும் அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக நன்றிகலந்த பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்த ஊர்காவற்துறை பிரதேச செயலர்மதிப்பிற்குரிய திருமதி மஞ்சுளாதேவி சதீசன் அவர்களுக்கு அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக நன்றிகலந்த பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நல்முயற்சிகளில் தொடர்ந்து செயலாற்றும். திருப.நடராசா திரு.கு.குமாரதேவன் மற்றும் பொதுமக்களனைவருக்கும் அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக நன்றிகலந்த பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


























 

Tuesday 20 April 2021



யாழ் அனலைதீவு அமரர் செல்வா வீரகத்தி நினைவாக இன்று இரண்டு மாணவர்களிற்கு கற்றல் உதவி வழங்கி வைக்கப்பட்டது.
நன்றி _ செல்வா வீரகத்தி அவர்களின் நண்பர்கள்

FB:Nallaiah Amirthanathan


 

Thursday 15 April 2021

நன்றி.

அனலைதீவு-பெரியபுலம் ஸ்ரீ சங்கரநாத மஹா கணபதிப்பிள்ளையார் கோவில்  திருவிழா நாட்களில் நிழற்படங்களைத் தந்துதவிய திரு.கு.பிரபா நிழற்படங்களை எடுத்துதவிய திரு.கேதீஸ்வரன் பிரசாந்த, திரு.நிசாந்தன், செல்வன்.கு.கௌதம் ஆகியோருக்கு உளமார்ந்த நன்றியோடுகூடிய பாராட்டுகள்.




 


அனலைதீவு-பெரியபுலம் ஸ்ரீ சங்கரநாத மஹா கணபதிப்பிள்ளையார் கோவில் கொடியிறக்கம்.
Apr.15.2021