Sunday 25 April 2021

கோசாலை.


Nov.16.2020ம் திகதிபுளியந்தீவில் அனலைதீவு இந்து சமய கலாசார பேரவை அமைப்பினரின் நன்முயற்சியால் கோசாலை ஒன்று அமைக்க ஊர்காவற்துறை பிரதேச செயலர் மதிப்பிற்குரிய திருமதி மஞ்சுளாதேவி சதீசன் அவர்களினால் அத்திவாரமிடப்பட்டுள்ளது. இந்த முயற்சி மாடுகளையும் குறிப்பாக மண்ணின் வளத்தையும் பாதுகாக்க பெரிதும் உதவியாக இருக்கமென்பதோடு பாதுகாப்பான பயிற்செய்கையையும் இனிவருங்காலம் உறுதிப்படுத்தும். மாடுகள் இல்லாத பூமி உயிர்ப்பிழந்துபோகும். காலமறிந்து செய்யும் இந்த நல்ல முயற்சியை முன்னெடுத்தவர்கள் அதற்கான உதவியை வழங்குபவர்கள் அனைவருக்கும் அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக நன்றிகலந்த பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்த ஊர்காவற்துறை பிரதேச செயலர்மதிப்பிற்குரிய திருமதி மஞ்சுளாதேவி சதீசன் அவர்களுக்கு அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக நன்றிகலந்த பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நல்முயற்சிகளில் தொடர்ந்து செயலாற்றும். திருப.நடராசா திரு.கு.குமாரதேவன் மற்றும் பொதுமக்களனைவருக்கும் அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக நன்றிகலந்த பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


























 

No comments:

Post a Comment