Thursday 25 October 2012


Tuesday 16 October 2012

மனது.



நிலவொளி ஒழுகி நனைந்த
வீதியில் நடந்தேன்.
 மனது
இருளில் தடுக்கி விழுந்தது.
முறிந்துபோனது நினைவு
அண்ணாந்து
நிலவு பார்க்கவும் நேரமில்லாத
இன்றைய
வாழ்வையெண்ணி .
                                                 சிவம்.

Sunday 14 October 2012


Monday 8 October 2012

கல்வி.

அறநெறிப் பாடசாலையின் கல்விசார் நற்பணிகளின்  தொடராக பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவரின் $100.00 அன்பளிப்பின் உதவியோடு கிளிநொச்சியில் வதியும் அதிதேவையுள்ள பயனாளியாக அடையாளம் காணப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக 13300.00 ரூபா வை அறநெறிப் பாடசாலை வழங்கியுள்ளது என்பதை மட்டற்ற மகிழ்வோடு அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறோம்.
 மனம்படைத்த தனவான்கள் தாமாக முன்வந்து வன்னி நிலப்பரப்பில் வறுமையில் வாடும் வருங்கால மாணவர் சமூகத்திற்கு உதவவேண்டும் என்று பணிவோடு வேண்டுகிறோம். நன்றி.
அறநெறிப் பாடசாலை.
திரு..நாராயணன்.
October 01.2012