Wednesday 29 November 2017

கெளரவிக்கும் விழா.


சிறப்பு விருந்தினர்களாக  முன்னைநாள் அதிபர் உயர்திரு சி.காராளபிள்ளை, மதிப்பிற்குரிய திரு.சு.தயாபரராசா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 விழாவின்போது கௌரவிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறு ஊக்கத்தொகைஅனலைதீவு கலாசார ஒன்றியத்தினால்  வழங்கப்பட்டது.
அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய அதிபர் மதிப்பிற்குரிய திரு நா.இராதாகிருஸ்ணன் அவர்களின் தலைமையிலான ஆசிரியப் பெருந்தகைகள் அனைவரும் கந்துகொண்டு சிறப்பித்தனர்.
விழாவினை சிறப்பாக நடாத்த உதவிய அனைவருக்கும் அனலைதீவு மக்கள் அனைவரினதும் சார்பாக நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.  பெற்றோர் மற்றும் இந்நிகழ்வை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்.
 பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் மற்றும்வித்தியாலய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் நமது மனம் நெகிழ்ந்த பாராட்டைத் தெரிவித்துக்கொள்வோம்.
இவ்விழாவில் கலைநிகழ்வுகளில் பங்குகொண்ட மாணவச்செல்வங்கள் அனைவருக்கும் நமது மனம் நெகிழ்ந்த பாராட்டைத் தெரிவித்துக்கொள்வோம்.
பயிற்றுவித்துப் பங்காற்றிய அனைவருக்கும் நமது மனம் நெகிழ்ந்த பாராட்டைத் தெரிவித்துக்கொள்வோம்.

படங்களுடன் தகவல்: திரு..கோகுலராஜ்.
-அனலைதீவு கலாசார ஒன்றியம்.கனடா.