Sunday 19 November 2023


 

அனலைதீவு மக்களின் ஆழமான நம்பிக்கையும் அடையாளமுமான அனலைதீவு ஐயனார் கோவில் திருப்பணி ஊர்ப்பணிகளுக்கான எதிர்கால திட்டமிடல் மற்றும் ஆலோசனைகள் உள்ளடங்கிய கலந்துரையாடல் அனலைதீவு மக்களின் ஒத்துழைப்புடன் ஆரோக்கியமான கருத்துப்பகிர்வினூடாக சிறப்பாக இன்று {Nov.19.2023} நடைபெற்றது.
திருப்பணியின் அவசியம்பற்றிய உறுதியான நிலைப்பாடு
திருப்பணிக்கான அமைப்பு ரீதியான செயற்பாட்டிற்கான ஏகமனதான உறுதியான ஒப்புதல்.
என்பதான மேற்கூறிய கனதியான கருத்துக்கள் தெளிவாக முன்வைக்கப்பட்டன.
ஊரிலுள்ள எல்லா ஆலயங்களினதும் மேம்பாட்டிற்கான ஒரு அமைப்பின் தேவையும் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கருத்தாடலின் தொகுப்பாக அனலைதீவு
ஆலயங்களினதும் பொதுப்ணிகளினதும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வெளிப்படையான அமைப்புரீதியான செயற்பாட்டிற்கான நிர்வாகமொன்றை தெரிவுசெய்ய தாமாக
முன்வந்த 28 அங்கத்தவர்கள் கொண்ட நிர்வாக அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
மிக விரைவில் புதிய நிர்வாமொன்று அமைக்கப்பட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும் என்பதை மகிழ்வோடு
தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி.
-நலன்விரும்பிகள்.

Thursday 16 November 2023