Friday 28 August 2015

புளியந்தீவு.

 அனலைதீவு புளியந்தீவு  ஸ்ரீ  நாகேஸ்வரசுவாமி ஆலயத் தேர்த் திருவிழா
 படங்கள்: திரு.வை.தனேஸ்.













புளியந்தீவு.

Thursday 27 August 2015


தொடரும்
இனி.

இமயத்துக் காற்றை
உள்ளங்கையில் ஊட்டிவிடும்
சீனத்து வித்தைகள் நம்தெருவில் நடக்கும்.

ஐங்கோணச் சுவருக்கள் இருந்தபடியே
மன்னார் வளைகுடாவில் மீன் பிடிப்பர்.
கருவாடாய் நமக்கே விற்பர்.

கறுப்புத் திரவத் தங்கம் அள்ளிமுடித்து
மலட்டுப் புழுதியில்  விதைக்க
ஒருமுறை மட்டுமே  முளைக்கும் விதைகள் தருவர்.

மறதி சேகரித்த தேனீகள்
கூடு திரும்பா.

மழைநீர் சேமிக்கும் மூளைகளை
உப்பில் மூடி
கடல்  நீரிலிருந்து குடிநீர் தருவர்.

நோய்களில் மடித்துவைத்து
இலகுவான உணவு தருவர்.

மருந்துகள் உணவாகும்.

மரணம் உயிர்வாழும்.

அரை நூற்றாண்டுகளுக்குமுன் கண்டுபிடித்த கனிமங்களை 
"உதவி" என்ற சொல்லைக் கூர்மைப்படுத்தி
வறுகுவர்.

அபிவிருத்தி என்பர்.

யாருக்கு?

- சிவம்.

Monday 24 August 2015

NANAIYUM KADAL..

Saturday 22 August 2015

நமது ஊரும் நாமும்.


நமது ஊர் அழகானது.வளமானது.தண்ணீரும், மண்ணும் சேரந்தால் புண்ணிய பூமி.கற்றவர்களையும், பண்பாளர்களையும் ஈன்றெடுத்த தெய்வ பூமி.

கடல்வழிப்பாதையை மட்டும் நம்பியிருக்கின்ற நமது ஊரவர்கள் இடர்நிறைந்த பல வருடங்களை தன்னப்பிக்கையோடும், தைரியத்தோடும் எதிர்கொண்டவர்கள். அந்த மண்ணைச் சுவாசித்தவர்கள்.
இன்றும் அங்கு வாழ்பவர்கள்.

வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பார்க்கும் பத்து நாட்கள் வீதிவலம் வரும் நமது தெய்வங்களை வருடம் முழுவதும் பார்ப்பவர்கள்.

நம் மண்ணின் சிறுவர்கள்,  மாணவர்கள் அந்த மண்ணின் புதையல்கள். பொக்கிசங்கள்.அங்குள்ள ஆசிரிய சமூகம் நம் மண்ணின் வழிகாட்டிகள்.நம்மண்ணிலுள்ள முதியவர்கள் நம்மையெல்லாம் ஆசிர்வதிக்கும்  ஆசிபெற்ற தெய்வங்கள்.

இவர்களெல்லாம்தான் நம் மண்ணின் பெருமையைப் பேசக்கூடிய தார்மீக் பொறுப்புடையவர்கள். நமதூரில் ஆறாம் தரத்தில் பத்து மாணவர்கள் எழுத வாசிக்கத் தெரியாதவர்களாய் இருந்தால்  உலகில் உள்ள நாமெவரும் பெருமைப்பட ஏதுமில்லை.
வெளிநாட்டிலுள்ளவர்களின் உதவிகள் செழுமையாக ஆற்றுப்படுத்தப்படவில்லையென்பது நம்மெல்லோருக்குமுள்ள மனக்குறையென்பதை ஊரவர்களும் நாமும் அறிவோம்.சரியான வழிகளைக்காண முற்படுவோம்.

மனிதர்களிடம் பொதுமையாக ஏற்படுகின்ற மாற்றங்கள் வெளிநாடுகளிலும் உண்டு. உள்நாட்டிலும் உண்டு.

 நம் மண்ணின் கீர்த்திகளை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அழகான அலைகள் ஆண்டாண்டு காலமாய் அதைத்தான் செய்கின்றன உரத்த இசை கலந்த குரலில்.
நன்றி.




நம் மண்ணின் கீர்த்திகளை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அழகான அலைகள் ஆண்டாண்டு காலமாய் அதைத்தான் செய்கின்றன உரத்த இசை கலந்த குரலில்.
நன்றி.

Thursday 20 August 2015

புளியந்தீவு.

 அனலைதீவு, புளியந்தீவு  ஸ்ரீ  நாகேஸ்வரசுவாமி ஆலய கொடியேற்றத்திருவிழா. படங்கள்: திரு.வை.தினேஸ்.












Tuesday 18 August 2015

யாருக்கு?




தொடரும்
இனி.

இமயத்துக் காற்றை
உள்ளங்கையில் ஊட்டிவிடும்
சீனத்து வித்தைகள் நம்தெருவில் நடக்கும்.

ஐங்கோணச் சுவருக்கள் இருந்தபடியே
மன்னார் வளைகுடாவில் மீன் பிடிப்பர்.
கருவாடாய் நமக்கே விற்பர்.

கறுப்புத் திரவத் தங்கம் அள்ளிமுடித்து
மலட்டுப் புழுதியில்  விதைக்க
ஒருமுறை மட்டுமே  முளைக்கும் விதைகள் தருவர்.

மறதி சேகரித்த தேனீகள்
கூடு திரும்பா.

மழைநீர் சேமிக்கும் மூளைகளை
உப்பில் மூடி
கடல்  நீரிலிருந்து குடிநீர் தருவர்.

நோய்களில் மடித்துவைத்து
இலகுவான உணவு தருவர்.

மருந்துகள் உணவாகும்.

மரணம் உயிர்வாழும்.

அரை நூற்றாண்டுகளுக்குமுன் கண்டுபிடித்த கனிமங்களை 
"உதவி" என்ற சொல்லைக் கூர்மைப்படுத்தி வறுகுவர்.

அபிவிருத்தி என்பர்.

யாருக்கு?

- சிவம்.

Monday 17 August 2015

அறிவு.

 அனலைதீவு  மாணவர்களுக்கான இலவச ஆரம்பக் கணணி அறிவு  வகுப்புகளில் மாணவர்கள்.