Sunday 25 October 2020
Saturday 24 October 2020
நினைவு.
இரும்பு மனிதன்.
திரு.நாகன் ஐயன்!(முணைச்சான்)
இந்த இரும்பு மனிதன் 2010 ஆண்டு தனது 63 வது வயதில் இறைபதமடைந்துள்ளார்.
இந்த இரும்பு மனிதனைப்பற்றி நினைவுகொண்டேயாவேண்டும்.
ஊரிலுள்ள வீதிகளனைத்தும் இவன் இரும்புக் கரங்களின் பங்கில்லாமல் நீண்டவைகளல்ல.
ஊரிலுள்ள கிணறுகளில் பெரும்பாலானவை இவன் இரும்புக் கரங்களின் பங்கில்லாமல் ஆழ்ந்தவைகளல்ல.
மிகக் குறிப்பாக இலங்கையின் பெருமைமிக்க சித்திரத்தேரான அனலைதீவு ஐயனார் கோவில் சித்திரத் திருத்தேருக்கான மரங்களின் காடுகளிலிருந்து ஊரின் கரை வரைக்கான பயணத்தை தமது பிரமிப்பான சரிர பலத்துடன் மட்டுமே வாகனங்களில் ஏற்றி கொண்டுவந்துசேர்த்த உழைப்பாளிகளில் முணைச்சான் ஐயன் அவர்கள் மிக முக்கியமானவர் என்பதை நாமெல்லோரும் அவரின் மனைவியாரின் துயர்பகிர்வின்போது நினைவுகொள்வோம்.
புகைப்ட நன்றி: குடும்பத்தினர்
காலங்கள் எல்லாவற்றையும் கடந்து போகும். நாம் நமது ஊருக்காகச் செய்கின்ற சின்னச் சின்ன பயன்பாடான அர்ப்பணிப்புகள் காலத்தின் மடியை எப்போதும் கனக்கவைத்தபடியே நகரும்.
Tuesday 20 October 2020
திரு. செல்வராசா (செல்வா)
Monday 19 October 2020
செல்வா வீரகத்தி
இருள் குவிந்த பொழுதுகளில் வெளிச்சமாகவும்
வெளிச்சங்களின் தீரத்தின்போது நிழலைப்போலவும்
என் துணிவின் பாதியாய் இருந்தவன்.
அவன் செய்து சேர்த்துவைத்தவை
அவன் இடைவெளியை நிரப்புமளவானவை.
உன் மனவெளிக்காற்றிடை
ஊர் நினைவே சுழன்றிருக்கும்.
உன் நினைவுகளால்........
Sunday 18 October 2020
பனை விதை விதைப்பு.
Saturday 17 October 2020
அலைமுதிர்சோலை: கடல்.
Saturday 10 October 2020
1990 நினைவலைகள்
உயிர் நனைந்த கடல்வழியே இருள் போர்த்தினோம்.
நினைவலைகள் மெழுகிய வெண் கரை பார்க்கிறோம்
கரைவந்து இந்நாளில் உயிர்த்திவலை காத்திருக்காதோ?
ஊர் எங்கே உறவெங்கே அலை ஓங்கிக் கேட்டிருக்காதோ?
நன்றி: ACOC
அனலைதீவின் இடர்ப்பாடுகளின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் உறுதுணையாகும் பிரதேச செயலகம், காவற்துறை, கடற்படை, கிராம அலுவலர்கள், சுகாதாரத்றையினர் மற்றும் ஊரில் பொதுப்பணியாற்றும் அத்தனை நல்லுள்ளங்கள்
அனைவருக்கும் அனலைதீவு மக்கள் அனைவரினதும் சார்பாக மனம்நிறைந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.