Sunday 18 October 2020

பனை விதை விதைப்பு.


 

பனை விதை விதைப்பு.
நமது ஊருக்கு வளத்தையும், வனப்பையும் கொடுக்கும் பனைகள் வயதோய்ந்துவிட்டன. வயதெல்லையை இட்டுநிரப்புவதற்கான கால எல்லையின் இடைவெளி தொலைத்துப்போய்விட்டது. 20 வருடங்களின் பின் மிகக்குறைவான அல்லது பனைகளற்ற ஊர்மாதிரியான தோற்றப்பாட்டை நம்மால் இப்போதே உணரமுடிகிறது.
ஊரிலுள்ளவர்கள் அனைவரும் ஒருமித்தபடி தமது வளவுகளிலெல்லாம் வேலியின் நான்கு கரைகளிலும் பத்து அடிக்கொரு பனம் விதையை விதைத்து நமது அடுத்த சந்ததிக்கு நமது முன்னோர் நமக்கு விட்டுச்சென்ற பனைவளத்தை நன்றியோடும் பொறுப்புணர்வோடும் கொடுத்துச் செல்ல முயற்ச்சிப்போம்.
இந்த முயற்சியில் ஊரிலுள்ள அனைத்து ஆலய நிர்வாகங்களும் மனமுவந்து செயற்படவேண்டுமென்பது நம்மனைவரினதும் பணிவான வேண்டுகோளாகும். ஊருக்கான அனைத்து பொது அமைப்புகளும் தமது வலுவுக்கேற்ப இந்த நற்பணியில் பங்குகொள்ள வேண்டும் என்பதும் நம்மனைவரினதும் பணிவான வேண்டுகோளாகும்.
வெளிநாடுகளிலுள்ள ஊரவர்கள் தமது காணிகளில் சாத்தியமான அளவு பனை விதைகளை விதைத்து பனைவளம் பெருக்க பேராதரவு தந்துதவுமாறு பணிவோடு வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment