Thursday 29 September 2022

கடலின் மடியில்,

கடலின் மடியில் தனித்து நீந்தவிடப்பட்ட தீவுகளில் அனலைதீவு, அதன் மேற்குக் கரை பெருங்கடலின் காலகாலமான சீற்றத்தினால் பேராபத்தான கடலரிப்பை எதிர்கொள்கிறது.
இதற்கான நிரந்தரத் தீர்வை தரும் முயற்சிகள் பொதுமக்கள், அரச நிர்வாகங்கள் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மட்டத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்படவேண்டும்.
அனலைதீவு மக்களின் வளர்ச்சியில் அக்கறைகொண்ட அரசியல் வாதிகள் அனைவருக்குமான பணிவான வேண்டுகோள் யாதெனில் அனலைதீவு மேற்குக் கரை பெருங்கடலின் தாக்கத்தை தடுப்பதற்கான தொலைநோக்கான முயற்சிகளை அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ள முன்வரவேண்டும் என்பதாகும்.