Sunday 3 April 2022

உணவு.

Analaitivu Sathasiva MV Analaitivu
2019ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் இருந்து எமது பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவை எமது பாடசாலையினுடைய மதிப்பிற்குரிய அதிபர் திரு.நா.இராதாகிருஷ்ணன் அவர்களின் ஒத்துழைப்போடும் Arivoli Ahavam Foundation உதவியோடும் அனலைதீவு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலய நிர்வாகத்தினர் வழங்கி வருகின்றனர். பேரிடர் காலப்பகுதியில் சூழ்நிலை காரணமாக வழங்கப்படாமலிருந்த மாணவர்களுக்கான சத்துணவு வழங்கும் பணியை அனலைதீவு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலய நிர்வாகத்தினர் 2022ம் ஆண்டு பங்குனி மாதத்திலிருந்து மீளத்தொடங்கியுள்ளனர். உணவு சமைப்பதில் பங்காற்றியவர்கள் மற்றும் நாள்தோறும் துணைநின்ற பெற்றோர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. 2022ம் ஆண்டு பங்குனி மாத காலப்பகுதி உணவிற்கான நிதியை திரு. தம்பு இளையதம்பி குடும்பத்தினர் Arivoli Ahavam Foundation ஊடாக வழங்கியுள்ளனர். இவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளை கூறிக்கொள்கிறோம்.
நன்றி: FB-Analaitivu Sathasiva MV Analaitivu