Wednesday 31 December 2014

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

 நமது சொந்த மண்ணின் மலர்களோடும் மணத்தோடும் அனைவருக்கும் எமதினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.










Monday 29 December 2014

வாழ்த்துக்கள்.



வாழ்த்துக்கள்.
யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற அனலைதீவைச் சேர்ந்த மாணவி
செல்வி.காந்தரூபன் சிவரூபினி க.பொ.த உயர்தரப்  பரீட்சையில்
 நடனம்                             : A
 அரசியல் விஞ்ஞானம் : A
 தமிழ்                                : A
 மாவட்ட நிலை           : 61
என்ற பெறுபேறுதனைப் பெற்றுள்ளார்.
செல்வி.காந்தரூபன் சிவரூபினி தொடர்ந்து கல்வியில் நன்னிலையில் முன்னேற நமதனைவரினதும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.



Thursday 25 December 2014

2004 ம் ஆண்டு உலக மக்களின் மனங்களையெல்லாம் உலுக்கி மோதிய ஆழிப்பேரலையின் சிதறிய துளியில் ஒலித்துகளாக பதிவுசெய்யப்பட்ட ஒலியிழை.


Wednesday 24 December 2014




Sunday 21 December 2014

நடுகை.

இந்த விருட்சங்கள் 1985ம் ஆண்டு அனலைதீவு மனோன்மணி அம்பாள் ஆலய அறங்காவல் சபை மற்றும் வழிபடுநர் சபை ஆகியவற்றின் அங்கத்தவர்களினால் நடப்பட்டவை. இப்பெரு விருட்சங்கள் கோடைகாலத்தில் பூமியில் நிழல் ஊற்றி நனைத்து நிமிர்ந்து நின்று இதமான நல்ல காற்றையும் ஊர்மக்களுக்கு வழங்கி இயற்கையைத் தூய்மைப்படுத்துகின்றன.கால் நூற்றாண்டு காலத்தைக் கடந்து விருட்சங்களாய் நிமிர்ந்துநிற்கும்  மருதமரம், அரசமரம், வில்வமரங்கள் மண்ணிலே நடப்படவேண்டும் என்ற நல்ல தூரநோக்கான சிந்தனையை நம் மனங்களிலும் நாம் நட்டுவைக்க இச்சிறு குறிப்பு உதவுமாயின் இன்னும் பல விருட்சங்கள் வளர்வதற்கு உரமாக அமையும்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இம்மரங்களை நட்டுவைத்த பெரியவர்களில் காலஞ்சென்ற திரு.வ.பரஞ்சோதி அவர்களும் ஒருவராவார் என்ற இப்பதிவின்மூலம் அன்னாரின் நினைவு விருட்சம்போல் உயர்ந்தது. இவ்விருட்சங்களைப் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்தவரை ஊரிலே ஒரு மரமேனும் நட்டுவைக்கவேண்டும் என்ற கட்டாயத்தை எல்லோர் மனதிலும் நட்டுவைக்கவே இப்பதிவையும் படங்களையும் பகிர்ந்துகொள்கிறோம்.
அனலை சமூகநல மன்றம்.
December 21.2014.



















Saturday 20 December 2014

கலாச்சார விழா.


மற்றும் இளைஞர் விவகார அமைச்சுடன் கலாச்சார அலுவல்கள்
திணைக்களத்தின் அனுசரணையுடன் தீவகம் வடக்கு கலாச்சாரப்பேரவையும் இணைந்து நடாத்திய கலாசார விழா December 19.2014ம் திகதி அனலைதீவு ஐயனார் ஆலய திருமண மண்டபத்தில்  முன்னூற்றுக்கும் அதிகமான மக்கள் மத்தியில் இனிதே நடைபெற்றது.
கலாச்சார விழாவின்போது
களைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரீசில்கள் வழங்கப்பட்டன.
பண்டார வன்னியன் நாடகம் அரங்கேற்றப்பட்டது.