Thursday 18 November 2021

இயற்கை ஆர்வலர்.

 

பன்முகப் பார்வையும், திறமையும், ஆர்வமும் கொண்ட இயற்கை ஆர்வலர் அமரர் திரு.தனிநாயகம் நாராயணன் அவர்கள்

கல்விசார் பணிகளின்பால் பதித்த முக்கியமான தடத்தின் நினைவுப் பதிவு இது.

 

அனலைதீவு மனோன்மணி அம்பாள் அறநெறிப் பாடசாலையின் கல்விசார் பணிகளை 2011ம் ஆண்டு தொடங்கி
2014ம் ஆண்டுவரை பயனுள்ள முறையில் நடாத்திய முன்னேற்றப் பாதையில் பெரும்பங்காற்றிய,  சமூக அக்கறையோடு வாழ்ந்த இயற்கை ஆர்வலர் திரு.தனிநாயகம் நாராயணன் அவர்களின் நினைவாக  Nov.18.2021ம் திகதி 77 மாங்கன்றுகள் அனலைதீவு மனோன்மணி அம்பாள் ஆலய அறங்காவல்சபையின் ஊடாக பொதுமக்களின் பங்களிப்போடு வழங்கப்பட்டன. நிகழ்வில் பங்குகொண்டு  ஒத்துழைப்பு வழங்கிய பசுமை அனலை அமைப்பினர்
பொதுமக்கள் அனைவருக்கும் நினைவார்ந்த நன்றி.

 

நன்றி: அனலைதீவு மனோன்மணிஅம்பாள்

Green Analai (பசுமை அனலை.)

நிழற்படக்கலை: திரு..உதயப்பிரகாஷ்