Saturday 24 October 2020

இரும்பு மனிதன்.


 

திரு.நாகன் ஐயன்!(முணைச்சான்)

இந்த இரும்பு மனிதன் 2010 ஆண்டு தனது 63 வது வயதில் இறைபதமடைந்துள்ளார்.

இந்த இரும்பு மனிதனைப்பற்றி  நினைவுகொண்டேயாவேண்டும்.

ஊரிலுள்ள வீதிகளனைத்தும் இவன் இரும்புக் கரங்களின் பங்கில்லாமல் நீண்டவைகளல்ல.

ஊரிலுள்ள கிணறுகளில் பெரும்பாலானவை இவன் இரும்புக் கரங்களின் பங்கில்லாமல் ஆழ்ந்தவைகளல்ல.

மிகக் குறிப்பாக இலங்கையின் பெருமைமிக்க சித்திரத்தேரான அனலைதீவு ஐயனார் கோவில் சித்திரத் திருத்தேருக்கான  மரங்களின் காடுகளிலிருந்து ஊரின் கரை வரைக்கான பயணத்தை தமது பிரமிப்பான சரிர பலத்துடன் மட்டுமே வாகனங்களில் ஏற்றி கொண்டுவந்துசேர்த்த உழைப்பாளிகளில் முணைச்சான் ஐயன் அவர்கள் மிக முக்கியமானவர் என்பதை நாமெல்லோரும் அவரின் மனைவியாரின் துயர்பகிர்வின்போது நினைவுகொள்வோம்.

புகைப்ட நன்றி: குடும்பத்தினர்

காலங்கள் எல்லாவற்றையும் கடந்து போகும். நாம் நமது ஊருக்காகச் செய்கின்ற சின்னச் சின்ன பயன்பாடான அர்ப்பணிப்புகள் காலத்தின் மடியை எப்போதும் கனக்கவைத்தபடியே நகரும்.

No comments:

Post a Comment