Monday 5 October 2015

கடல்.

 அறுபத்தியாறு உயிர்க்கூடு கடலோடுதான்.
அணையாத தீக்காடு மனதோடுதான்.
கால் நூற்றாண்டுகளைக் கடந்தும் 06.10.1990ம் திகதி நடைபெற்ற படகு விபத்தின் நினைவுகளை ஏந்தும் இந்நாளில் நம்மைவிட்டுப் பிரிந்த உறுவுகளின் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திப்போம்.
உறவுகளின் பெயர்களும் வயதும்
Chandravathany Kandasamy
காரிருள்.
கருநீலக் கடல்
உயிர்க்கூட்டுக்குள்
உப்பு நீரை அடைத்து
கொடுங்காலன் செய்த
கொலைவெறி நாடகம்
சடங்குகள் செய்ய கூட
சாட்சிகள் இன்றி
சமுத்திரத்தில்
சங்கமித்த உடல்கள்
காலங்களால் ஆற்றொணாக்
காயங்கள்
உயிர்வரை வலிதரும்
உறவுகளின் இழப்புகள்
சலனங்கள் நீங்கி
சாந்தி அடையட்டும்!
அத்தனை ஆத்மாக்களும்
சாந்தி! சாந்தி! சாந்தி!












































































No comments:

Post a Comment