Friday 16 March 2012


  முகம் பார்.
 சூரிய வெளிச்சத்துள் புகுந்துகொள்.
 நிறங்களாய்ப் பிரிந்து போ.
திரைந்து  
இலைகளுக்குள்  பச்சையமாக
 இறுகி
 பூக்களாக வெளியில் வா.
விதையாகு.                                                         
வீரியப்படு.
முளைவிடு.
விருட்சமாகி  வெளிச்சம்  வாங்கு.
உனக்குள் உன்னைத்தாங்கு.
வாழ்க்கை உருசிக்கும்.

சுற்றிப் பாலைவனமென்றால்
 புற்தரையாக விரித்துப்போடு
 உன்னை.


கடலுக்குள்
முகம் பார்க்கும்
 வானத்தை
 கண்ணுக்குள் சிறைப்படுத்து.
 மேகமாகி மண்ணில் விழு.
 ஒவ்வொரு துளிப்பொழுதிலும்
உன் பெயரெழுது.
வாழ்க்கை
உணர்ச்சிகளின்  நாட்குறிப்பு.
எழுது.
வாசி.
வார்த்தையில் கஞ்சனாகு.
கவிதையில்  வள்ளலாகு.
வாழப்பழகு.
வாழ்க்கை உருசிக்கும். 
                                              மு.கு.சிவசோதி.
                                              January 9,1999.

No comments:

Post a Comment