Wednesday, 11 July 2012

தூரிகை.







அலை இரைந்து  
நுரை சொரிந்து
கல் துருத்திக்
கரை செதுக்கி
மணல் திரட்டி
 நமதூரை அழகுபடுத்தும்
ஆழ்கடல்
வானத்தை இழுத்துப் போர்த்தி
நீலமாகி
நீண்டு நனைகிறது
அழகில்.
அதிலும்
அழகு பூசும்
பிஞ்சுத் தூரிகைகள். 
                                      -சிவம்.

No comments:

Post a Comment