Wednesday 29 May 2013

வானம்.


மரங்களேயில்லாத மணல்வெளியில்
 இரைதேடும்
நிழல்கொத்திப்பறவைகள்
நிஜங்களை
அறியாது.
உணராது.

தூக்கணாங்குருவி 
அழகழகாய்க் கூடு கட்டும்.

வாழ்க்கையை எழுதவும்
மனிதரை வாசிக்கவும்
கற்றுக்கொடுக்கும்
வானம்  
எச்சங்களால் அசுத்தப்படாது.
                               சிவம்.
படத்தின் உரிமையாளருக்கு நன்றி.

No comments:

Post a Comment