Wednesday 26 June 2013

பிரியமானவர்களோடு..




பிரியமானவர்களோடு.....
     அனலைதீவு அறநெறிப்பாடசாலையானது தனது அடிப்படை நோக்கமான கல்விசார் முன்னேற்றத்திற்கான எல்லாவிதமான செயல்வடிவங்களையும் எப்போதும்போலவே தொடர்ச்சியாக செயற்படுத்திவருகிறது.
     சமூகப்பொறுப்பற்ற தனிமனித செயல்களோ அன்றி தவறான செய்திகளின் தாக்கமோ அறநெறிப்பாடசாலையின் எந்தவிதமான செயற்பாட்டையும் பாதிக்கவில்லை.மாறாக அனலைதீவு மாணவச்செல்வங்கள் இப்போது வளமான கல்விச்சேவைகளை பெற்றுக்கொண்டு பயனடைகிறார்கள். அறநெறிப்பாடசாலையானது  தற்போது மூன்று உயர்தர மாணவர்களின் கல்விசார் உதவித்தொகையைப் பொறுப்பேற்றுக் கொடுத்துதவுவதோடு மேலும் கல்விச் சமூகத்திற்கான உதவிகளையும் தொடர்ந்து செய்துவருகிறது. எமது பணிகள் தொடர தொடர்ந்து புரிதலோடு உதவும் அத்தனை அன்புள்ளங்களுக்கும் ஊரவர்கள் அனைவரினதும் சார்பாக நெகிழ்வான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அறநெறிப்பாடசாலையின் கணணி நிலையத்தில் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்கிறார்கள். காலத்தின் கட்டாயத் தேவையான கணணி அறிவை நம் மாணவச்செல்வங்களுக்கு அறிமுகப்படுத்துவதானது அவர்களின் வாழ்வில் மிக்க பயனுள்ள பணியென்பதை நாம் உணர்வோம்.
விமர்சனங்களும் விமர்சனங்களுக்குட்பட்டவைதான்.
திரு..நாராயணன்.
அறநெறிப்பாடசாலை. June 26.2013.


No comments:

Post a Comment