Saturday 29 November 2014

வெள்ளச் சிரிப்பு.











வேலங்குளத்து வடக்குக் கரையில
வெள்ளம் மேயுது வெள்ளக் கொக்கு.
காலங்கொடுத்த பச்சைப் புடவையை
கட்டிச் சிரிக்குது வயலும் வரப்பும்.

நீரால் நிரம்பிய குளங்கள்.
நெல்லால் நிரம்பிய வயல்கள்.
வெள்ளம் நிரப்பிய பள்ளம்.
மதவுகள் மேவிய வெள்ளம்.

இயற்கைக்கு
துளிகளுக்குள் வெள்ளத்தை மறைக்கும்
இரகசியம் தெரியும்.

மனிதன்
வரட்சிக்குள் இயற்கைகைப் புதைக்கிறான்.
பூமியை
அதிகமாக ஆழமாகக் கிழறுகிறான்.
இனியேனும்
இயற்கையை நேசிக்காமலும் மதிக்காமலும்
தொடர்ந்து கிழறினால்
அவன் கைகளில்
அடுத்த தலைமுறையின் எலும்புகளே அகப்படும்.
                                             -சிவம்.









No comments:

Post a Comment