Friday 12 June 2015

மனக்கிளி.



பறக்கும் வானவில்லாய்ப் பச்சைக்கிளி.
கண்ணில் மட்டும் நான்கு நிறம்.
நனைந்த பனையாய் மனது இருண்டால்
இந்தக்கிளியைப் பறக்க விடுங்கள்
செந்நிற வாய் திறந்து இருள் விழுங்கி
ஒளி பீச்சும்.
வானம் வெளுக்கும்.

பனம்பொந்துக்குள் விழுந்துகிடக்கும்
பழைய நினைவுகளை இந்தப் பச்சைக்கிளி கொத்துகிறது.

பனங்காட்டுப் பறவைக்கு
கழுத்தில் கறுப்பு வளையம் யார் போட்டது?
கருமேகத்தைத் துளைத்துப் பறந்ததன் அடையாளமோ?

பட்டுப்போனபின்பும்
பனை
பறவைக்குக் கூடு.

மரம் நட்டுவைக்க நேரமில்லா மனிதா
மூச்சுக்காற்றை வேற்றுக்கிரகமேறித் தேடுகிறாய்.


பூமி அடிக்கடி விழிக்கிறது.
உயிர்கள் கண் மூடுகின்றன.

விழித்துக்கொள்.
                                         -சிவம்.

படங்கள்: திரு.க.உதயப்பிரகாஸ்



No comments:

Post a Comment