Tuesday 1 September 2015

NANAIYUM KADAL..







Maunaguru Sinniah


அருமையான lyric.ஒவ்வொரு வரிகளும் அர்த்தபூர்வமானவை.நல்ல இசை.இடையிற் காட்டப்படும் ஆளுமைகள் பாடலுக்கு மேலும் வலுத்தருகின்றன.இவர்களுட் சிலர் நான் நேரடியாகப் பழகியவர்கள்,சிலர் நெருக்கமான நண்பர்கள் அதனால் பாடல் என்னை அதிகமாக கவர்ந்திருக்கலாம்.பாடியவரின் குரலில் கம்பீரமும்,அழுத்தமும் இருந்திருந்தால் பாடல் மேலும் சோபித்திருக்கும்.சமூகப் பொறுப்புமிக்க மெல்லிசைப் பாடல் உருவாக்குவோர் மிக அருமை.பக்தி,காதல்,விரக்தி(இதற்கு அவர்கள் கொடுக்கும் பெயர் த்த்துவப் பாடல்) இவை பற்றிய பாடல்களே மிக அதிகம்.இப் பின்னணியில் இந்தப் பாடல் பாலை வனத்தில் நிழல் தரு ஒரு ஒற்றை மரம் போல எனக்குத் தெரிகிறது.உங்களுக்கும்உங்கள் குழுவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Chat Conversation End




அண்மையில் வெளியிடப்பட்ட "நனையும் கடல்" என்ற தலைப்பிலான "அலையாத்திக் காடு" பாடல் பற்றி பெருமதிப்புக்குரிய பேராசிரியர் திரு.சி.மௌனகுரு அவர்களின் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் இங்கு பதிவுசெய்கிறோம். பேராசிரியரின் கருத்துக்கள் எமது படைப்பின் கனதியை எமக்குத் தெளிவுபடுத்தியதோடு ஆரோக்கியமான மன உந்துதலைத் தந்துள்ளது.பேராசிரியர் திரு.சி.மௌனகுரு அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.இப்படைப்பை அழகுபடுத்திய இசையமைப்பாளர் திரு.பிரியன் பாடகி.செல்வி.பானு.படத்தொகுப்பாளர்.திரு.துஷிகரன் ஆகியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றியுடன் சிவம்.

No comments:

Post a Comment