Saturday 28 January 2017

கபடி.

ஊர்காவத்துறை பிரதேச செயலகத்தினால் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையிலான இன்று (28.01.2017) நடைபெற்ற கபடி போட்டியில் அனலைதீவு அருணோதயா விளையாட்டுக்கழகம் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.வருடாந்த பெரு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன அந்த வகையில் இன்று இறுதிபோட்டியில் ஊர்காவற்றுறை சென்.ஜேம்ஸ் அணியினரை எதிர்த்து எமது அருணோதயா விளையாட்டுக்கழகம் மோதிக்கொண்டது. இரு அணியினரும் விறுவிறுப்பாக தமது ஆட்டத்தினை வெளிப்படித்தினர் இறுதியில் 38:23 என்ற புள்ளியின் அடிப்படையில் எமது அணி வெற்றி பெற்றது. இத்தோடு நான்காவது தடவையாக வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கி கொண்டுள்ளது.ஆகவே எமக்கு வெற்றியினை பெற்றுத் தந்த வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.
அருணோதயா சனசமூக நிலையம்.







No comments:

Post a Comment