Sunday 24 September 2017

தென்னை.

 அனலைதீவு புளியந்தீவில் 1975ம் ஆண்டளவில் மதிப்பிற்குரிய திரு.சண்முகம் முத்துக்குமாரு அவர்களால் புளியந்தீவு நாகதம்பிரான் ஆலய நிர்வாகத்தினரின் உறுதுணையோடு நமக்காகவும் நமக்கு அடுத்துவரும் சந்ததிகளுக்காகவும்
நட்டு வளர்க்கப்பட்ட தென்னைமரங்கள் அழகாக வளர்ந்து நிற்கின்றன. மதிப்பிற்குரிய திரு.சண்முகம் முத்துக்குமாரு
அவர்களின் முன்மாதிரியை நினைவில் கொண்டு  மரியாதை கலந்த நன்றியோடு பாராட்டி நினைவுகூருவோம்.
அண்மைக்கால கோவில் நிர்வாகத்தினரும் தொடர்ந்து தென்னை மரங்கள் நட்டு வளர்ப்பதையும் பாராட்டுவோம்.
அனலைதீவில் இன்று  அதிகமான தென்னங்கன்றுகளை நட்டும், நடவைத்தும் இயற்கைக்கு மிகப்பெரும் தொண்டாற்றும் திரு.நா.பரஞ்சோதி அவர்களையும் இத்தருணத்தில் மனதாரப் பாராட்டி அவரது சேவை தொடர வாழ்த்துவோம்.
படங்கள்:திரு.த.கோகுலராஜ்.









No comments:

Post a Comment