Mar 28.2018ம் திகதி வெளியான 2017ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகளில் யா/அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய மாணவர்கள் சிறந்த முறையில் சித்தியடைந்துள்ளார்கள் . இந்த சிறப்புமிக்க சாதனையை சாத்தியப்படுத்திய பெருமதிப்பிற்குரிய வித்தியாலய அதிபர் திரு.ந.இராதாகிருஸ்ணன் மற்றும் அவருடன் இணைந்து அக்கறையோடு பணியாற்றிய ஆசிரியப் பெருந்தகைகள் அனைவருக்கும் ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக நமது நெஞசார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்வோம். இந்த சாதனையை வசப்படுத்திய நமது அன்பிற்குப் பாத்திரமான அனலைதீவு மாணவச்செல்வங்கள் அனைவருக்கும் ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக நமது நெஞசார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்வோம்.
இப்பெரும் சாதனையை தமதாக்கிய பெற்றோர், ஊர்மக்கள் அனைவருக்கும் நமது நெஞசார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்வோம்.
தொடர்ந்து இச்சாதனைகளை சாத்தியப்படுத்த அவசியமான எல்லாவிதமான செயற்பாடுகளிலும் ஊர்மக்களாகிய நாம் தொடர்ந்து அக்கறையோடு பணியாற்றுவோம்.
-அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.
No comments:
Post a Comment