அண்டங்கண்ட
காகம் வந்து
தட்டி
முட்டி உடைச்சதென்ன?
தண்டப்
பணம் கட்டாம
தாகம்
ஆறிப் போனதென்ன?
போதையில
கத்திறப்போ ஆகாயம்
பொத்தல்
என்று சொல்லுவியோ?
போற
திசை தெரியாம- மேல
மேகத்தில
சிக்குவியோ
உன்
நிறத்து மேகத்துக்கு
ஒரு
செய்தி சொல்லிவிடு
மண்ணுக்குள்ளும்
ஈரமில்ல
மனசுக்குள்ளும்
ஈரமில்ல-பூமி
தாங்கி
வைச்சு தந்த தண்ணி
தாகத்துக்குச்
சொந்தமில்ல.
பேரனுக்கு
பானைக்குள்ள
உப்புச்சேர்த்து வைக்கிறாக.
ஊருக்குள்ள
கடலை விட்டு
உப்புத்
தீவு கட்டுறாக.
-சிவம்.
படங்கள்:
திரு.க.உதயப்பிரகாஷ்
No comments:
Post a Comment