Tuesday, 24 July 2018

"அனலைதீவு வரலாறும் அருள்மிகு ஆலயங்களும்"



அனலைதீவு வரலாறும் அருள்மிகு ஆலயங்களும்நூல் வெளியீடு

ஓய்வு நிலை உதவித்திட்டப் பணிப்பாளர் திரு..அரியரத்தினம் அவர்கள் எழுதிய அனலைதீவு வரலாறும் அருள்மிகு ஆலயங்களும் நூல் வெளியீட்டு விழா ஜூலை 24 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு அனலைதீவு ஐயனார் ஆலய அன்னதான மண்டபத்தில் வடக்கு, கிழக்கு மாகாணச் செயலாளர் திரு.வே. பொ. பாலசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


இவ் வெளியீட்டு விழாவில் நூல் மதிப்பீட்டுரையை பிரதமவிருந்தினரான யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறைத்தலைவர் பேராசிரியர் திரு.எம். வேதநாதன் அவர்களும் நயவுரையை யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ வணிகபீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் திரு.கே. தேவராஜா அவர்களும் ஆற்றினார்கள்.
 அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா போஷகர் திரு.பே. கணபதிப்பிள்ளை அவர்கள்,  அனலைதீவு கலாசார ஒன்றிய செயற்பாட்டுக் குழுத்தலைவர்
திரு.. நடராசா ஆகியோர் சிறப்புரையையும் ஆற்றினர்.
"அனலைதீவு வரலாறும் அருள்மிகு ஆலயங்களும்" நூலாசிரியர் அரியரத்தினத்தின் ஏற்புரையும் ஆற்றப்பட்டது.
இந் நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக வாழ் நாள் பேராசிரியர்
திரு.எஸ். சத்தியசீலன் அவர்கள், ஊர்காவற்றுறை பிரதேச செயலர்
 திருமதி எஸ். மஞ்சுளாதேவி மற்றும் கனடா மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி திரு.கு. கிருபா ஆகியோர்  விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த கல்விமான்கள், அதிகாரிகள், பெருமக்கள் அனைவருக்கும் அனலைதீவு மக்கள் அனைவரினதும் சார்பாக மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்வோம். “அனலைதீவு வரலாறும் அருள்மிகு ஆலயங்களும்நூலாசிரியர் திரு..அரியரத்தினம் அவர்களுக்கு அனலைதீவு மக்கள் அனைவரினதும் சார்பாக நன்றியும், பாராட்டும் தெரிவித்துக்கொள்வோம். இதுபோன்ற ஆவணப்திவுகளும், நிகழ்வுகளும் அவசியமானவை   என்பதால் இன்னும்பல அனலைதீவின் வரலாற்றுப் பதிவுகளைவெளிக்கொண்டுவர ஆலய நிர்வாகம், அமைப்புகள் முன்வரவேண்டும்.

- படங்களுடன்  தகவல்:திரு..கோகுலராஜ்









































































































No comments:

Post a Comment