Friday 21 February 2020

அனலைதீவு ஐயனார் கோவில்!




அனலைதீவு ஐயனார் கோவில்!
புதிதாக தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகத்தினர் கடந்த நிர்வாகத்தினரிடமிருந்து எல்லாவிதமான பொறுப்புக்களையும்
முழுமையாகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்னர்.

புதிய நிர்வாப் பொறுப்பேற்பினூடாக எதிர்கால நம்பிக்கை  வெளிச்சப்பாடானதாக நம்பும் அனைவரும் இதுவரை கால
ஆலய பரிபாலனத்தை நடாத்திய கடந்த நிர்வாகத்தினருக்கு நன்றிகலந்த பாராட்டைத் தெரிவித்துக்கொள்வோம்.
பல ஆண்டுகளாக முறையான நிர்வாக மாற்றத்திற்காக  உழைத்த பொதுமக்கள்,  கிராம அலுவலர்கள், மதிப்பிற்குரிய பிரதேச செயலர், காவல்துறையினர்  அனைவருக்கும் ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக நன்றி கூறிக்கொள்வோம்.
இனிவரும் காலம் ஆலயத்திற்கும் பொதுமக்களுக்குமான தொடர்பையும் பொறுப்பையும் வலுப்படுத்துவதாகவும்
பொதுப்பணிகளில்  பங்குகொள்வதாகவும் அமைய வாழ்த்துக்கள்.

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி,
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.
-மகாகவி பாரதியார்.





No comments:

Post a Comment