Tuesday 25 September 2012

தடம்.

அனலைதீவில்,
இலங்கைக் கல்வித் திணைக்களத்தின்
தரம் ஐந்துக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் மூன்று மாணவர்கள்     தேர்ச்சிபெற்றுள்ளனர்.

அனலைதீவு வடலூர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் :

செல்வன்.ஆதித்தமூர்த்தி நிரோசன் 169 /200 மதிப்பெண்களுடனும்
செல்வன்.கனகேஸ்வரன் யபீசன் 155 /200 மதிப்பெண்களுடனும்                    

அனலைதீவு தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி

செல்வி..பரம்சோதி பவித்திரா 154 /200 மதிப்பெண்களுடனும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

இவர்களின் கல்விப் பாதையில் இன்னும் பல மெச்சுதலுக்குரிய சிறப்பான தடங்கள் பதிக்க பூகோளத்தின் பரப்பெல்லாம் பரந்து வாழும் அனலை மக்கள் அனைவரினதும் சார்பாக இதயபூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.
இம்மாணவர்களின் பெருமிதமான வளர்ச்சிக்குத் துணை நின்ற பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊரவர்கள் அனைவருக்கும் இதயம் நெகிழ்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.
அறநெறிப் பாடசாலை. திரு   .நாராயணன். September 25.2012



No comments:

Post a Comment