Friday 16 November 2012

நடுகை.2




மரங்களைப் போற்றும் மரநடுகை நன்முயற்சியில் பங்களிப்புச் செய்துதவிய அனைத்து மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்களனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வரிய நற்பணியைப் பொறுப்பேற்று திறம்பட செய்துமுடித்த நமது நிர்வாகத்தினர் அனைவருக்கும் அனலை மக்களனைவரினதும் சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
திரு.த.நாராயணன்.
16.12.2012.













மேன்மைமிகு அனலை மக்களுக்கு!
இயற்கையைப் போற்றும் பண்பினை உத்வேகப்படுத்த வேண்டிய இன்றைய காலத்தின் கட்டாயமாக மரங்களைப் பாதுகாப்பதும், புதிய மரங்களை நடுவதும் அத்தியாவசியமான கடமைகளென்ற சிந்தனையை மாணவர்களினதும் ,பெரியவர்களினதும் மனதில் ஆழமாக நடவேண்டுமென்ற அனலைதீவு அறநெறிப் பாடசாலையின் கருதுகோளின் அடிப்படையில் இன்று(16.11.2012) அனலைதீவு தெற்கு தமிழ்க் கலவன் பாடசாலை, அனலைதீவு வடலூர் தமிழ்க் கலவன் பாடசாலை மற்றும் முன்பள்ளிகளிலும் மரங்கள் நடப்பட்டன என்ற மனமகிழ்வான நற்செய்தியை தங்களனைவருடனும் பகிர்ந்து கொள்கிறோம்.
அறநெறிப் பாடசாலை.
திரு.த.நாராயணன். 16.11.2012















No comments:

Post a Comment