Friday 16 November 2012

நடுகை.. 2




மேன்மைமிகு அனலை மக்களுக்கு!
இயற்கையைப் போற்றும் பண்பினை உத்வேகப்படுத்த வேண்டிய இன்றைய காலத்தின் கட்டாயமாக மரங்களைப் பாதுகாப்பதும், புதிய மரங்களை நடுவதும் அத்தியாவசியமான கடமைகளென்ற சிந்தனையை மாணவர்களினதும் ,பெரியவர்களினதும் மனதில் ஆழமாக நடவேண்டுமென்ற அனலைதீவு அறநெறிப் பாடசாலையின் கருதுகோளின் அடிப்படையில் இன்று(16.11.2012) அனலைதீவு தெற்கு தமிழ்க் கலவன் பாடசாலை, அனலைதீவு வடலூர் தமிழ்க் கலவன் பாடசாலை மற்றும் முன்பள்ளிகளிலும் மரங்கள் நடப்பட்டன என்ற மனமகிழ்வான நற்செய்தியை தங்களனைவருடனும் பகிர்ந்து கொள்கிறோம்.
அறநெறிப் பாடசாலை.
திரு..நாராயணன். 16.11.2012

No comments:

Post a Comment