Sunday 9 March 2014

பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்.

பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்
- ஞானசக்தி
women north srilankaயுத்தத்தினாலும் ,சுனாமியினாலும் ஆண்களை இழந்த பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் இன்று வரை பிரச்சனைகளாகவே இருக்கின்றன. மாகாண சபைகள் ,எத்தனையோ அரச சார்பற்ற நிறுவனங்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் இந்த ஆண்தலைவர்களை இழந்த குடும்பங்களின் இருப்பிடம் ,தொழில் ,பிள்ளைகளின் கல்வி பாதுகாப்பான வாழ்வு என்பவற்றுக்கு உத்தரவாதம் எதுவும் இல்லை.
இவ்வளவு நிறுவனங்கள் இருந்தும் வடக்கிலும் கிழக்கிலும் 85 ஆயிரம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் இருக்கின்றன என்று புள்ளி விபரங்கள் அடுக்கப்படுகின்றன. இது கையாலாகாத்தனமாகும்.
அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பாக பலத்த சந்தேகங்கள் கேள்விகள் எழுகின்றன. பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்திற்கென பல கோடிக்கணக்கான ரூபாக்கள் புரள்கின்றன. இவர்கள் என்ன செய்கிறார்கள்.
பெண்கள் விவகார அமைச்சிருக்கிறது. இந்த அமைச்சு என்ன செய்கிறது?
இதேபோல் மாகாண சபைக்கும் இருக்கிறது.
இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது முக்கியமான கேள்வியாகும்
அடுத்து யுத்த படையணிகளில் இயக்கங்களில் இருந்த பெண்கள்.
இவர்கள் தாமும் மனிதர்களாக இந்த சமூகத்தில் வாழ்வதற்கான நிலைமைகைள் ஏற்படுத்தப்படவில்லை.
அவர்கள் தமக்கு ஏதும்  நேருமோ என்ற அச்சத்துடனேயே வாழ்கிறார்கள.; தமது கடந்த காலத்தை ஒளித்து வாழவேண்டிய நிலமை இருக்கிறது. சமூகத்தில் ஒரு தீண்டாமை பாராட்டப்படுகிறது.
அதிகார வர்க்கம்; அளவு கடந்த அதிகார செருக்குடன் செயற்படுவதற்கான நிலைமை நிலவுகிறது.
துஸ்பிரயோகம் ,பாலியல் பற்றிய அறிவின்மை ,கலாச்சாரம் என்பன பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களாக இருக்கின்றன.
சமூகப் பாதுகாப்பென்பது கிடையாது.
கூட அதிகார துஸ்பிரயோகங்கள் சமூகத்தில் நிலவும் வன்முறைகள் மோசமான பாதிப்புக்களை ஏற்படுததியுள்ளன.
இன்று பெண்கள்மீது வன்முறையைப் பிரயோகிக்கும் குழுக்கள் பல்கிப் பெருகியுள்ளது.
சுதந்திரமாக நடமாடுவதற்கான இடைவெளிகளைக் குறைக்கும் விதமாக காரியங்கள் நிகழ்கின்றன.
இந்தப் பெண்களுடைய பிரச்சனைகளை முறையிடுவதற்கு பொலிசில் போதிய அறிவுள்ள மொழி தெரிந்த தனிப்பிரவு தேவைப்படுகிறது.
இன்றும் வீட்டில் ஊதியமில்லாமல் உழைக்கும் பிரிவினராகவே பெண்கள் காணப்படுகிறார்கள்.
இநத் விடயத்தில் ஐரோப்பாவில் வட அமெரிக்காவில் நிலைமைகள் பெருமளவுக்கு மாறிவிட்டன.
வரட்சி இயற்கை அழிவு போன்றனவும் முதலில் பெண்கள் மீதே சுமையாகwomen srilanka இறங்குகின்றன.
இவற்றுடன் காப்பிரேட்டுக்களும் சேர்ந்து கிராமங்களை ஆக்கிரமித்திருப்பது பரவலான ஒன்று.
விலைவாசிகள் மூச்சை திணறடிப்பதாக அமைகின்றன. விரும்பியோ விரும்பாமலோ அடுப்படிகளைப்பார்க்க வேண்டிய நிலையில் பெண்கள் இருப்பதால் வறுமையின் கொடுமை பெண்களையே முதலில் தாக்குகிறது.
மத்திய கிழக்கிற்கு வீட்டு பணிப் பெண்களாகச் செல்பவர்களின் சுயமரியாதை கண்ணியம் காப்பாற்றப்படுவதில்லை. அவர்களுக்கு அந்த அடிப்படைவாத அரபு நாடுகளில் தொழிற்சங்க உரிமைகளோ பாதுகாப்போ கிடையாது.
அவர்கள் சித்திரவதைகளையும் நாளாந்த அவமானங்களையும் சந்திக்கிறார்கள்.
தமது குடுமபங்களின் ஜீவனோபாயத்திற்காக மிக அபாயகரமான வாழ்வொன்றை நடத்துகிறார்கள். அது இந்த நாட்டிற்கு அவமானகரமானது.
இந்த நிலைமைகளில் மாற்றம் வேண்டும் .
இவர்களும் சரி இங்கு ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில்புரிபவர்களும் சரி அடிமட்ட ஊதியத்தைப் பெறுபவர்களாகவே இருக்கிறார்கள்.
எமது கிராமங்களில் தீண்டாமையின் கொடுமைகளை அனுபவித்த படி தான் பெண்கள் வேலை செய்கிறார்கள்.
தொலைக்காட்சித் தொடர்கள் சினிமாக்கள் பெண்கள் மீதான வன்முறைகளை அதிகரிப்பதாக அமைகின்றன.
ஜனநாயக சீர் திருத்தங்கள் மனித உரிமை தொடர்பான விடயங்களில் பெண்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் .
தேசிய இன- தொழிலாளர் பிரச்சனைகள் போல் இதுவும் தனித்துவமானதும் முக்கியமானதும் ஆகும்.
காணாமல் போனவர்கள் பிரச்சனைகள் உள்நாட்டிலேயே பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்படவேண்டும்.
சாட்சிகள் ,வழக்குத் தாக்கல் செய்வோரின்  பாதுகாப்பு உறுதிப்படுத்தபடவேண்டும் .
பல குடும்பங்களில் ஆண்கள் பெருமளவுக்கு காணாமல் போயிருக்கிறார்கள்.
உயர் பாதுகாப்பு வலய நிலங்கள் பரவலாக கையளிக்கப்பட்டடிருந்தாலும் இன்னும் பலர் தமது சொந்த வாழ்விடங்களை கனவாக கருதி வாழ்கிறார்கள.; இவை கையளிக்கப்பட வேண்டும்.
பெண்களின் அரசியல் அதிகாரம் மற்றும் வௌ;வேறு நிர்வாக கட்டுமானத் துறைகளில் இருந்தாலும் பெண்கள் பற்றிய சமூக மனோபாவத்தில் மாற்றம் எதுவும் நடந்து விடவில்லை.

இரண்டாம் பட்சமான பார்வையை நாளந்த வாழ்வின் ஒவ்வொரு திருப்புமுனையிலும் அவதானிக்க முடியும்.
தீண்டாமையும் ,பெண்களின் மீதான அநீதியும், பிரதேச வேறுபாடுகளும் இந்த சமுதாயத்தில ஆதிக்கம வகிக்கும் பிரதான குணாம்சங்களாக இருக்கின்றன.women demo
பிற்போக்கான சடங்காசாரங்கள் இன்றளவில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
இந்த வெட்கக் கேட்டை வைத்துக் கொண்டுதான் தமிழர்களின் மானம்- கலாச்சாரம் பற்றி பேசப்படுகிறது.
இங்கு பெண்கள் வெளியில்சென்று சுதந்திரமாகச் சீவிப்பதற்கான நிலைமைகள் உருவாவதை கலாச்சாரச் சீரழிவென்கிறார்கள்.
இங்கொன்றும் அங்கொன்றுமாக நிகழும் சம்பவங்களை முழுச் சமூகத்திலும் விபச்சாரம் நிகழ்வதாக தமிழ்மக்களின் தலைவர்கள் எனப்படுவோர் ஆரவாரிக்கிறார்கள்.
இவர்கள் மொத்தமாகவே எமது சமுதாயத்தில் பெண்களை இழிவு படுத்துகிறார்கள்.
ஆனால் போதைவஸ்து, மிதமிஞ்சிய மதுபாவனை ,நுகர்வு கலாச்சாரத்தின் சீரழிவுகள் இருக்கின்றன.
ஆனால் மரபு ரீதியாக பெண்களுக்கிடப்பட்ட விலங்குகளையும் தளைகளையும் கலாச்சாரம்  எனப் போற்றிப் புகழ்வது சகிக்கும் படியாக இல்லை.
மத -இன- சாதி பேதங்கள் அப்படியே இருக்கின்றன. இலங்கையில் அவற்றின் அதிதீவிர வடிவங்கள் உருவாகியிருக்கின்றன.
பகட்டான கோயில்கள், சடங்குகளாக மூட நம்பிக்கைகள் உதாரித்தனங்கள் பெருகியுள்ளன. எளிமையான பகட்டில்லாத சமத்துவமான வாழ்வொன்று கட்டியமைக்கப்பட வேண்டியிருக்கிறது.
யுத்தங்கள் வன்முறைகளில் பெண்களே பெருமளவிற்கு இலக்கு வைக்கப்படுகிறார்கள்.
இயற்கைப்பேரழிவுகளும் பெண்களையும் சிறுவர்களையுமே பெருமளவு பாதித்துள்ளன.
எனவே யுத்த எதிர்ப்பு ,இயற்கை பாதுகாப்பு, சமாதானம,; வறுமை ஒழிப்பு சமத்துவமான வாழ்வை உருவாக்குவதில் பெண்கள் பங்களிக்க வேண்டியிருக்கிறது.
மனித உரிமை ஜனநாயகம் சமூக பொருளாதார அபிவிருத்தி ஆகியதுறைகளில் பெண்கள் குறிப்பிடத்தகுந்த பங்ககை ஆற்றமுடியும்.
இயல்பாகவே பெண்கள் இல்லாத உலகை உருவாக்கும் போக்கு கருவிலேயே நிகழ்கிறது.
இதனால் ஆண்பெண்விகிதாசாரத்தில் பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.
இனமத அடிப்படைவாதக் கோஸ்டிகள் தமது முதல் தாக்குதலை பெண்கள் மீதே தொடுக்கிறார்கள்.
இலங்கையில் பர்தா அணியும் பெண்கள் மீது அடிப்படைவாதிகள் நிகழ்த்தும் தாக்குதல்கள் சிறந்த எடுத்துக் காட்டு.
வீட்டிலும் ,பகிரங்கமாகவும் வேலைத் தலங்களிலும் போக்குவரத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுத்தப்படவேண்டும்.
இரவு  -தனிமையாக வாழ்தல் இங்கு பெண்களுக்கு அச்சுறுத்தலாகவே அமைகின்றன.
 எமது நாடாளுமன்றம் மாகாண சபைகளில் ஒரு வீதத்திற்கு குறைவான வீதம் என்பது அவமானகரமானது.
காப்பிரேட்டுக்களின் செல்வாக்கிற்கு உட்பட்ட உலகிலும் பெண்கள் வியபாரப் பண்டங்களாக மலிவான கூலிகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் மேலும் பெண்கள் அடிமைகளாகவும், கையாலாகாத பணியாளர்களாகவும் ,நுகர்வுப் பொருட்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். .
சுதந்திரமான பெண்கள் அமைப்புக்களின் தேவை அதிகப்பட்டிருக்கிறது.
ஞானசக்தி.
 நன்றி: தேனி.

No comments:

Post a Comment