மாம்பூவைப் பார்த்ததிலே
மனசெல்லாம்
கனியாச்சு.
மாவிலையின்
நடுவினிலே
உயிர் வழியும்
நிலையாச்சு.
பச்சை நிறம்
கண்ணுக்குள்ளே
சொட்டுச்சொட்டாய்
ஊறிவரும்.
பார்வையுள்ள
காலம்வரை - கண்ணிலே
கொட்டிவைக்க
ஆசைவரும்.
பச்சை முத்தை
மாமரத்து
பவளக் காம்பில்
கட்டிவைச்ச
இயற்கையம்மா உன்
எழிலே
இவ்வுலகின்
அச்சாணி.
பூத்திருக்கும்
மாமரம்போல்
மனிதா நீயும்
சிரித்துவிடு.
பூமி முழுதும்
ஓர் இனம்தான்
வெறும் பேதங்களை
மறந்துவிடு.
-சிவம்.
No comments:
Post a Comment