Friday 19 June 2015

வெடுக்கு.



அழகாய்ப் பூச்சொரிகிறதே ஆச்சரியப் பூப்பந்தல்.
முற்றத்திலே மூன்று பக்கம் நட்டுவைத்த செவ்வரத்தை.
தெற்குப்பக்கம் பந்தல்மேலே கொட்டிவைத்த மல்லிகைப் பூ
பக்கத்திலே முச்சந்திக்  கிளைவிட்டு முழுமரமும் தேமாப் பூ.
வருபவர்கள் வாசிக்கும் கைக்கூவாய் ஒற்றைப் பனை.
ஆச்சரியம் சொரிகிறதே அழகான பூப்பந்தல்.

பூவை விட்டு வாசம் பறிக்கும் பூங்காற்று
மடி நிறைய மடித்துவைத்து ஊர் முழுக்க ஊட்டிவிடும்.

வடக்குப்  பக்கக்
கிடுகுக் கூரைக் குசினியிலும்
மேற்குப்பக்கத் தாழ்வாரத்தில் சொருகிவைத்த அலுமினியத்தட்டை கிழக்குப்பக்கத்தில் மாற்றிவைக்கவா இத்தனை ஆண்டுகள்?

முற்றம் அழகு.
பூக்கள் அழகு.
இதமான காற்றும் பொதுவாக.

இன்னும்
வெடுக்குச் சொருகிய தாழ்வாரங்களாய்
மனிதர்கள்.      


சிவம்.                                                                              


No comments:

Post a Comment