Tuesday 29 September 2015

நயினார் குளம்.




நயினார்  குளத்தின் மகிமை!

பேராற்றும் வள நயினார் குளக்கட் கோவில்
பெரிதுவந்த ஆரியரே ஆடீரூன்சல்.
-ஐயனார் திரு ஊஞ்சல்

கானமரு திருவணலைப் பதியில் மேவும்
கதியுதவு நயினார் நற்குளமே மேலா
-ஐயனார் திரு ஊஞ்சல்

நந்துசேர் புனற்றுறை சூழ் பண்ணை நயினார்
குளப்பதி சேர் சுந்தரத் திருமந்திரத்தவர் சுவாமி எச்சரிக்கை.
- எச்சரிக்கை

ஆலயங்களை புனரமைத்து பொழிவுற  மகிழ்வு கொள்ளும் நாம்
நயினாகுளத்தானே!  கூழாவடியானே! என மெய் உருகி அழைப்பதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை.

நயினார் குளத்தின் இன்றைய தோற்றம் அதனை தூர்வாரி கரை கட்டிப் பேணவேண்டிய தேவையை நமக்கு உணர்த்துகிறது. ஐயனார்மீதும், ஊர்மீதும் பற்றுள்ளோர் முன்வந்து முயற்சிசெய்து இத்திருப்பணியைச் செய்வது ஊரின் நிலத்தடி நீரின் அவசியத்தையும்,  பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி வேளாண்மைக்கும், நன்னீர் தேவைக்கும் உறுதுணையாக அமையும்.
ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் வெளிநாட்டிலுள்ள அதன் பிரதிநிதிகள் இப்பணி பற்றி ஆவன செய்யவேண்டுவது ஊரவர்களாகிய நம்மனவைரினதும் கடமையாகும்.

அடியேனின் ஆதங்கம்.
த -நாராயணன்.









No comments:

Post a Comment