Thursday 16 June 2016

மழைநீர் சேகரிப்பு.

 இன்று June 16.2016ம் திகதி அனலைதீவில் மனித நேயக் கூட்டமைப்பு நிறுவனமும் ஊர்காவற்துறை பிரதேச செயலகமும் இணைந்து மழை நீரினைச் சேமித்தல் தொடர்பாக ஒரு பயிற்சிப்பட்டறையை நடாத்தினர். இதில் இருபது மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள் பங்குபற்றி பயன்பெற்றனர். அனைவருக்கும் திரையில் படங்கள்மூலம் விளக்கமளிக்கப்பட்டது. மக்கள் பயன்பெற்றனர். மழைநீரினை எவ்வாறு சேமித்தல்?. நிலத்தடி நீர் எவ்வாறு மாசுபடுகின்றது? மழை நீரினை எதிர்காலத்தில் எவ்வாறு சேமிப்பது தொடர்பான நடைமுறைகளை பின்பற்றுவதற்கான வழிமுறைகள். என்பவற்றை தெளிவாக விளக்கிக்கூறினர். இம்முயற்சிகளை முன்நின்று செயற்படுத்தும் அனலைதீவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. திரு .இ.ரனேசன் அவர்களுக்கும் கிரா அலுவலர்
திரு. சி.வினேஸ் அவர்களுக்கும் அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம்
இத்தனை முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி ஒத்துழைக்கும் திரு.வை.தனேஸ் அவர்களுக்கும் நமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
 இந்நிகழ்வு கணணி நிலையத்தில்  நடைபெற்றது.

படங்கள். திரு.வை. தனேஸ்.























No comments:

Post a Comment