Sunday 28 August 2016

அழகு.

 சிரட்டைக் கைத்தொழில்!
சிரட்டைப் பொருட்களில் கலையழகுப்  பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியின் பின்னர் உருவாக்கப்பட்ட
கலைப்பொருட்களின் அழகைப் பாருங்கள்..வளவாளர் திரு.த.சுரேஸ்குமார் அவர்களின் பயிற்றுவிப்பின் பயனாக உருவாக்க்பட்ட சிரட்டைகளினாலான இவ்வரிய கலைப்பொருட்கள் நமக்கு இயற்கை தந்த வரங்களை, வளங்களை இனிமேலும் சரியாகப்பயன்படுத்த நாமெல்லோரும் முனையவேண்டுமென்ற அழுத்தமான செய்தியைச் சொல்கின்றன. இதுபோன்று அனலைதீவில் பயனற்று வீணாகும் பனை வளங்களையும் நாம் பயன்படுத்தி கலைப்பொருட்களாக மாற்றி நலிந்த பொருளாதார நிலையிலுள்ள குடும்பங்கள் வாழ்வுற உதவவேண்டும்.இப்படியான நல்ல திட்டங்களை அமுல்படுத்திவரும் அரச நிர்வாக அலகுகளைச்சேர்ந்த அத்தனைபேருக்கும் அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக நன்றிகளையம் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம். கலைப்பயிற்றுனர் திரு.த.சுரேஸ்குமார் அவர்களின் ஆற்றல்மிக்க சேவைக்கு நன்றிகளையம் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.
இவ்வாறான வளங்களை எல்லா இடங்களிலும் பயனுள்ளவாறு மாற்ற எல்லோரும் தத்தமது இடங்களில் முயற்சிகளை மேற்கொள்வது மிகவும் பயனுள்ளதாக அமையும்.









 படங்கள்: திரு.வை.தனேஸ்.

No comments:

Post a Comment