Monday 1 June 2020

நன்றி.

பெருமதிப்பிற்குரியவர்களோடு!
நமது நினைவுகளுக்கெட்டாத முன்னெப்போதுமில்லாத வகையான இடர்க்காலச் சூழலில் அனலைதீவில் எல்லாவிதமான செயற்பாடுகளிலும் நிதிக்கரம் நீட்டிய அனைத்து புலம்பெயர்வாழ் அனலை மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அனலைதீவுக்கான இடர்க்கால உதவிகள் ஊர்வந்தடைய எல்லாவழிகளிலும் உதவிய ஊற்காற்துறை பிரதேச செயலர் மதிப்பிற்குரிய திருமதி.ச.மஞ்சுளாதேவி மற்றும் கிராம அலுவலர்கள்.திரு.சி.வினேஸ் திரு.அ.ஆரூரன் ஆகியோருக்கு அனலை மக்கள் அனைவரினதும் சார்பாக மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அனலைதீவு மக்களின் இடர்க்காலத் தேவையை தனிப்பட்ட முறையில் தனிநபர்களின் நிதியுதவியை உள்வாங்கி நேர்பட நடைமுறைப்படுத்திய அனைவருக்கும் அனலை மக்கள் அனைவரினதும் சார்பாக மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இடர்க்கால உதவி செய்த அனலைதீவு கலாசார ஒன்றியம், அனலைதீவு ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், லண்டன் ஒன்றிய ஆதரவாளர்களின் நிதிப்பங்களிப்புடன் இடர்க்கால உதவி வழங்கிய அனலைதீவு மனோன்மணி அம்பாள் ஆலய நிர்வாகத்தினர்,திரு.க.வாமதேவன் மற்றும் தனிப்பட்ட முறையில் உதவிய பெருமனத்தோர் மற்றும் உதவிகளை செற்படுத்திய அனலைதீவு இளையவர்கள் அனைவருக்கும் அனலை மக்கள் அனைவரினதும் சார்பாக மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அனலைதீவு அருணோதயா சனசமூக நிலைய நிர்வாகத்தினர் மேற்கொண்டுவரும் உணர்வுபூர்வமான இடர்க்கால உதவிகளுக்கு அனலை மக்கள் அனைவரினதும் சார்பாக மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அனலைதீவில் இன்றுவரையான அனைத்து சமூக செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்து பல நாடுகளிலிருந்தும் வரும் உதவிகளுக்கான அனைத்துவிதமான கொடுப்பனவுகளையும் நேரிய முறையில் செயற்படுத்திய திரு.கு.குமாரதேவன், திரு.ப.நடராசா, திரு.க.உதயப்பிரகாஷ் ஆகியோருக்கு அனலை மக்கள் அனைவரினதும் சார்பாக மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அனலைதீவில் எல்லாவிதமான செயற்பாடுகளிலும் உதவிக்கரம் நீட்டிய அனைத்து அனலைவாழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பலவிதமான சிரமங்களுக்கும் சுமைகளுக்குமிடையில் அனலைதீவு புலம்பெயர் மக்களின் சமூக செயற்பாடுகளை எந்தவிதமான குறைபாடுகளுமின்றி நேரிய முறையில் நேர்மையான நிதி நிர்வாகத்திறமையோடு செயற்படுத்தியுதவும் திரு.கு.குமாரதேவன், திரு.ப.நடராசா, திரு.க.உதயப்பிரகாஷ் ஆகியோருக்கு நமது பாராட்டுதலை வெளிப்படுத்துவது அவசியப்பாடாகிறது.
எந்தச் சூழலிலும், எந்த நேரத்திலும், எந்த மனநிலையிலும், எவருக்கும் சொல்லக்கூடியது சொல்லவேண்டியது
நன்றி.
-பொதுமக்கள் சார்பாக.

No comments:

Post a Comment