Thursday 4 June 2020

வேண்டுகோள்!

உலகெங்கும் பரந்துவாழும் அனலைதீவைச் சேர்ந்த துறைசார் புத்திஜீவிகள் அனைவருக்குமான பணிவான வேண்டுகோள்!
கல்வி.
சுற்றுச் சூழல்.
விசாயம்.
வீதிக்கட்டுமானம், போக்குவரத்து.
கடற்பிரயாணம்.
கடல் வளம்.
வைத்தியத்துறை.
நீர் மேலாண்மை.
புற்றுநோய் நிபுணத்துவம்.
சமூக மனநிலை மாற்றத்திற்கான ஆலோசனை.
உளவியல்.
இந்தத் துறைகளில் அறிவார்ந்த புத்திஜீவிகள் தமது அறிவாற்றலை தமக்கு எழுத்தறிவித்து உலகத்தை அறிமுகம்செய்த
தமது ஊருக்கு இதுவரை எந்த வகையில் பயன்படுத்தியிருக்கிறார்கள்?(ஓரிரு உதாரணங்கள் தவிர்த்து)
ஏன் பயன்படுத்த முடியாது?
ஏன் பயன்படுத்தவில்லை?
இனிமேலாவது பயன்படுத்தமுடியாதா?
பணம் காசு வேண்டாம்.
தமக்கு அறிவுதந்த ஊருக்கு தங்களாலான அறவுரையை துறைசார் திணைக்களங்களினூடாக ஏன் நடைமுறைப்படுத்த முயலக்கூடாது?
இனியாவது ஒரு மனநிலை மாற்றம் நிகழுமா?
இனியாவது ஒரு மனநிலை மாற்றம் நிகழுமா?
நாம் படித்தவர்கள் என்பதை நமது ஊரின் முன்னேற்றம் மட்டுமே மதிப்பிடு செய்யும்.

No comments:

Post a Comment