Thursday 4 June 2020

முன்வரலாம்.

எழுத்து வலிமையானது.
நமது சமூகத் தேவைகளை பொதுவெளியில் பேசுபொருளாக உயிர்ப்பிப்பது செயல்வடிவத்திற்கான அத்திவாரமாகும்.
நமது கடமைகளை, நினைவுகளை விதைத்துவிடுவோம். முளைப்பது முளைக்கட்டும்.
1990ம் ஆண்டு அனலைதீவு மேற்குக் கரையிலிருந்து நாட்டின் அசாதாரண சூழல் காரணமாக தமது உயிர் காக்கக் கலமேறி கடலோடு உறையுண்டுபோன 66 நம் உறவுகளின் நினைவாண்டுகள் 30 ஆகிறது.
அவர்களுக்கான நிரந்தரமான நினைவுத்தூபி ஒன்றை நம்மவர்களில் ஆற்றலுள்ள கட்டிடப்பொறியியலாளர், வடிவமைப்பாளர்கள், ஓவியர், சிற்பிகள் தாமாக முன்வந்து நமது உறவுகளின் நினைவையும், நமது ஊரின் பிணைப்பையுப் பிரதிபலிக்கும் இயற்கையான வடிவமைப்போடு வடிவமைத்து உதவுவதற்கான வேண்டுகோளாக
இப்பதிவு அமைகிறது.
ஆற்றலுள்ள அன்புள்ளங்கொண்ட வடிவமைப்பாளர்கள் தங்களாலானதை முயற்சிக்கலாம்.
நிதிவளம் கொண்டோர் தாமாகவே முன்வரலாம்.

No comments:

Post a Comment