Friday 10 July 2020

முயற்சி.

 May.02.2020
 May .10
 
2020ம் ஆண்டின் உலகளாவிய ஊர்முடக்கக் காலத்தில் சுயசார்பு உற்பத்தி நிலையின் அவசியத்தை மனித சமூகம் தூசிதட்டிப்பார்த்தது.
அனலைதீவில் இயற்கையின் துணையோடு மட்டுமேயான ஒரு வீட்டுத்தோட்டத்தை மே மாதம் 02 ம்திகதி ஆட்டெரு மாட்டெருவுடன் சாம்பல் கலந்த மண்ணில் நாற்றுப்பாத்தி அமைத்து விதைகள் இட்டு ஆரம்பித்தோம்.
அன்றிலிருந்து இன்றுவரையான வீட்டுத்தோட்ட வளர்ச்சியின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மிகச்சிறிய அளவிலான இம்முயற்சி எல்லோருக்கும் சாத்தியமானது என்பதற்கான சாட்சியமாகும். இந்த முயற்சியில் எந்த இரசாயன பசளையோ மருந்தோ உபயோகிக்கவில்லை என்பது கவனிக்கப்படவேண்டியது.
ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இரண்டு பூசணி விதைகளை நடுங்கள். நாளாந்தம் அரிசி கழுவும் தண்ணீரை அதற்கு ஊற்றுங்கள். குசினிக்குப் பக்கத்தில் ஒரு சுண்டங்காய்  மரம் நடுங்கள். அதனடியில் கை கழுவுங்கள். குழந்தைகளுக்கு  மரங்களுக்கு தண்ணீர் ஊற்றக் கற்றுக்கொடுங்கள். இயற்கை தானாக அவர்களுக்குள் வளரும்.
பாடசாலை கல்விமுறை  இயற்கையை செயல்முறையோடு இணைத்துக்கொள்ளவேண்டும். இனிவரும் காலங்களில் ஊரிலுள்ள மூன்று பாடசாலைகளிலும் ஒரு வெண்டிக்கன்றையாவது கண்ணுறுவோம்.
ஊரின் பொது அமைப்புகள் இதுபோன்ற முயற்சிகளை ஊக்குவிக்க முன்வரவேண்டும்.
ஊரில் மண்ணை உயிர்ப்போடு வைத்திருக்க  அடிப்படையான கால்நடைகளின் அவசியத்தையும் பாதுகாப்பையும் இயற்கை வேண்டி நிற்கிறது.
இந்த சிறு முயற்சிக்கான ஒத்துழைப்பு:
நண்பன் வைரவன்
தம்பி உதயப்பிரகாஷ்
தங்கை சாலினி சாள்ஸ்
நந்தினி அக்கா
தங்கை நளாயினி
மகாலிங்கம் அண்ணன்.
அஞ்சலா ரீச்சர்
இது ஒரு கூட்டு முயற்சி.

 May.24

 June .15

 June.19
 July.01.2020

 July.04.2020


 July.04.2020









July.06.2020

No comments:

Post a Comment