Sunday 5 July 2020

பசுமை.

அனலைதீவு இளைஞர்களின் நீர்மேலாண்மை மீதான அக்கறையுடன்கூடிய புதிய முயற்சிகள் வாழ்த்தி வரவேற்கப்படவேண்டியவை. அவர்கள் நம்மால் உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கப்படவேண்டியவர்கள்.
அவர்கள் நல்லவற்றை செய்கிறார்கள் என்பதைவிட நமது ஊரின் இயற்கைச்சூழலின் அடிப்படையிலான குடிநீர்த் தேவையின் இருப்பை நிலைகொள்ளச் செய்வதற்கான தேவையின் புரிதலை தாமாக உணர்ந்து இந்தச் செயற்பாடுகளுக்குள் இணைந்துள்ளமையே மிக முக்கியமான விடயமாகப் புரிந்துகொள்ளப்படவேண்டும்.
உலகெங்கும் பரந்து வாழும் நம்மவர்கள் இவர்களின் செயற்பாடுகளுக்கு தங்களாலான உதவியை அவர்களுடன் தொடர்புகொண்டு வழங்குவது நமது பூமியில் பசுமையை மெருகேற்ற உதவும்.
தொடர்புகளுக்கு:greenanalai@protonmail.com

No comments:

Post a Comment