Friday 5 April 2024

வங்கிக் கணக்கின் ஊடாக நிதி.




அருள்மிகு ஶ்ரீ சங்கரநாதர் மகாகணபதிப் பிள்ளையார் திருக்கோவில் திருவிழாவையொட்டி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் வெளிநாட்டிலுள்ளவர்களின் நிதி உதவியை நேரடியாக ஆலய வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவைத்து உதவுமாறு நிர்வாகம் கோரியுள்ளது.
கடந்தகால மேற்படி ஆலய நிதி முகாமைத்துவத்தின் மீதான விமர்சனங்களுக்கப்பால் அடியார்களின் நேரடியான வங்கிக் கணக்கின் ஊடாக நிதி அனுப்பும் நடைமுறை சாத்தியமானதும், சத்தியமானதுமாக அமைகிறது.
நிதிப்பரிவத்தனையில் தொழில்நுட்பம் மற்றும் அரச நடைமுறைகள் நவீன மாற்றங்களை சாத்தியப்படுத்துகின்றன.
நேரடியான நிதிப்பங்களிப்பு நிதியை வழங்குபவரின் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கிறது. தவறுகளை தவிர்க்க அனுகூலமாகிறது.
இனிவருங்காலங்களில் ஆலயங்களுக்கும், அடியவர்களுக்கும் இடையில் உறவுகளையும், தேவைகளையும் பேணுவதற்கு சமூக வலைத்தளங்கள் பல தெரிவுகளை நம்முன் தந்துள்ளன. அவற்றைப் பயன்படுத்தி நிதியைக் கையில் வாங்கும் நடைமுறையை முழுதுமாக இல்லாமல் ஆக்கவேண்டும்.
காலத்தின் அடிப்படையான புரிதலோடு அருள்மிகு ஶ்ரீ சங்கரநாதர் மகாகணபதிப் பிள்ளையார் கோவில் திருவிழாவுக்கான அடியார்களின் பங்களிப்பு யாவும் நேரடியான வங்கிக்கணக்கின் ஊடாக நிதி அனுப்பும் நடைமுறையை அனலைதீவு ஐயனார் மரபியல் காப்பகம் கனடா
அமைப்பினராகிய நாம் உறுதியான நம்பிக்கையோடு பொதுமக்களுக்குப் பரிந்துரை செய்கிறோம்.
-அனலைதீவு ஐயனார் மரபியல் காப்பகம்- கனடா


 

No comments:

Post a Comment