Monday, 13 January 2014

அனலைதீவு, எழுவைதீவிற்கு 24 மணிநேர மின்விநியோகம் 15 ஆம் திகதி முதல்
13.01.2014 - திங்கட்கிழமை

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மேற்கொண்ட முயற்சியின் பயனாக தீவகத்தின் அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய பகுதிகளுக்கு 24 மணிநேர மின்சாரம் வழங்கப்படவுள்ளது.

நீண்டகாலமாக குறித்த பகுதிகளுக்கு பகுதிநேர அடிப்படையிலேயே மின்சேவை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு இவ்விடயம் தொடர்பாக கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தனர்.

இதனையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியின் பயனாக அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய பகுதிகளுக்கு 24 மணிநேர மின்விநியோகம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.epdpnews.com/

No comments:

Post a Comment