Thursday 30 June 2016

கருவாடு பதனிடல்.



கருவாடு பதனிடல். (உற்பத்தி)


கருவாடு பதனிடல் (உற்பத்தி) தொடர்பான வேலைத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள பயனாளிகளுக்கான பயிற்சிச் செயலமர்வு இன்று 30.06.2016 அன்று காலை 10.30 மணிக்கு அனலைதீவு ஸ்ரீவேணி கல்வித் திண்ணையில் இடம்பெற்றது. இதில் இலங்கை தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் வடக்குக் கிழக்கு மாகாண இணைப்பாளர் கே.ரவிக்குமார் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினார். மேற்படி திட்டத்தில் அனலைதீவைச் சேர்ந்த 18 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஊர்காவற்றுறை பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகத்தர்இ கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்இ கிராமிய பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்இ துஃ38 கிராம அலுவலர்இ கிராம துஃ38 அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். எதிர்காலத்தில் மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட்டு தொழில் உபகரணங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தகவல் மற்றும் படங்கள். திரு.வை.தனேஸ்.

















No comments:

Post a Comment